NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு மீண்டும் தற்காலிக தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு மீண்டும் தற்காலிக தடை
    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு மீண்டும் தற்காலிக தடை

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு மீண்டும் தற்காலிக தடை

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 11, 2023
    08:10 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏற்கனவே தாமதமாகி வரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், வெள்ளிக்கிழமை தேர்தலுக்கு தடை விதித்தது.

    8 மாதங்களாக பாலியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் இந்திய மல்யுத்த வீரர்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் பல்வேறு மாநில சங்கங்களின் சட்ட மனுக்கள் காரணமாக, பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    இறுதியாக மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவில் உள்ள 15 பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டது.

    இதில், பாலியல் குற்றச்க்காட்டை எதிர்கொண்டுள்ள இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் உட்பட 4 பேர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    hwa appeals punjab high court

    ஹரியானா மல்யுத்த சங்கம் மனுத்தாக்கல்

    பாராளுமன்ற உறுப்பினர் தீபிந்தர் ஹூடா தலைமையில் இயங்கும் ஹரியானா மல்யுத்த சங்கம் இந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளதோடு, ஹரியானா ஒலிம்பிக் சங்கத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் விதிகளின்படி, ஒரு மாநில சங்கம் அதன் தேர்தல்களில் வாக்களிக்க இரண்டு உறுப்பினர்களை அனுப்பலாம்.

    ஹரியானா அமெச்சூர் மல்யுத்த சங்கம் தாங்களும் இந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்துள்ளதால் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருப்பதாக கூறியுள்ளது.

    ஆனால், அது ஹரியானா ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் வாக்களிக்கும் உரிமை இல்லை எனக் கூறி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஹரியானா மல்யுத்த சங்கம் மனுத்தாக்கல் செய்தது.

    இதையடுத்து வழக்கின் விசாரணைக்காக தேர்தலை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மல்யுத்தம்
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மல்யுத்தம்

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! மல்யுத்த போட்டி
    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! இந்தியா
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! டெல்லி
    விருதை விவசாய தலைவரிடம் கொடுத்த மல்யுத்த வீரர்கள்! இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தடை விதிப்போம் என உலக மல்யுத்த சங்கம் எச்சரிக்கை! டெல்லி

    இந்தியா

    இந்திய அரசியலை திருப்பி போட்ட அரசியல் நண்பர்களின் பட்டியல்  அரசியல் நிகழ்வு
    நண்பர்கள் தினத்தை முன்னிட்டு 'ஒருநாள் டெலிவரி பாயாக' மாறிய ஜொமோட்டோ சிஇஓ நண்பர்கள் தினம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    உ.பி.யில் கொடூரம்; சிறுவர்களை சிறுநீர் குடிக்க வைத்து ஆசனவாயில் மிளகாயை தேய்த்த கும்பல் உத்தரப்பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025