NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்?
    இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான்

    இந்தியா மீது ஐசிசியிடம் புகாரளித்திருக்கும் பாகிஸ்தான், ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 18, 2023
    10:44 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த அக்டோபர் 14ம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாதிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தாயசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி.

    அன்றைய போட்டியின் போது விக்கெட்டை இழந்து அறைக்கு திரும்பிய பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து, இந்திய ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டிருக்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற காணொளியானது இணையத்தில் வைரலாகப் பரவி விவாதத்தை எழுப்பியிருந்தது.

    இந்நிலையில், ரசிகர்களின் குறிப்பிட்ட நடவடிக்கை தொடர்பாக ஐசிசியிடம் புகார் அளித்திருப்பதாக தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புகார்கள்: 

    குறிப்பிட்ட என்ன விதமாக புகார் அளித்ததாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறிப்பிடவில்லை. இந்த சம்பவத்தைத் தவிர்த்து மேலும் சில விஷயங்கள் தொடர்பாகவும் ஐசிசியிடம் இந்தியா குறித்து புகாரளித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    நடப்பு உலக கோப்பை தொடரில் கலந்து கொள்ள இந்தியா வருவதற்காக விண்ணப்பித்திருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கான விசாக்களை வழங்குவதை தாமதமாக்கியது மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கான விசாக்களை வழங்க எந்தவொரு வசதியும் இல்லாதது குறித்தும் ஐசிசியிடம் புகாரளித்திருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

    மேற்கூறிய வகையில் பாகிஸ்தான் வீரர்கள் மீதான இந்திய ரசிகர்களின் நடவடிக்கையை குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளாரன மைக்கி ஆர்தர்.

    ட்விட்டர் அஞ்சல்

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எக்ஸ் பதிவு:

    The Pakistan Cricket Board (PCB) has lodged another formal protest with the ICC over delays in visas for Pakistani journalists and the absence of a visa policy for Pakistan fans for the ongoing World Cup 2023.

    The PCB has also filed a complaint regarding inappropriate conduct…

    — PCB Media (@TheRealPCBMedia) October 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    ஒருநாள் உலகக்கோப்பை

    Sports RoundUp : உலகக்கோப்பையில் இந்தியா அபார வெற்றி; சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்; மேலும் பல முக்கிய செய்திகள் இந்திய கிரிக்கெட் அணி
    நவீன்-உல்-ஹக்கை ட்ரோல் செய்த ரசிகர்கள்; தடுத்து நிறுத்திய விராட் கோலி; வைரலாகும் காணொளி விராட் கோலி
    AUSvsSA ஒருநாள் உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? ஷுப்மன் கில்

    கிரிக்கெட்

    AUSvsSA : தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் ஒருநாள் உலகக்கோப்பை
    ஜஸ்ப்ரீத் பும்ராவை ஒப்பிட அந்த பாகிஸ்தான் வீரருக்கு தகுதியே இல்லை; கவுதம் காம்பிர் தடாலடி ஜஸ்ப்ரீத் பும்ரா
    INDvsPAK போட்டிக்காக லகான் படத்தில் பணியாற்றிய கலை இயக்குனருடன் கைகோர்த்த பிசிசிஐ இந்தியா vs பாகிஸ்தான்
    INDvsPAK போட்டியை புறக்கணிக்கணும்; ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்; பின்னணி என்ன? ஒருநாள் உலகக்கோப்பை

    பாகிஸ்தான்

    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி உலக சாம்பியன்ஷிப்
    தேசிய கொடி இல்லாமல் வந்த பாக். வீரரை இந்திய கொடியின் கீழ் நிற்க வைத்த நீரஜ் சோப்ரா; வைரலாகும் காணொளி நீரஜ் சோப்ரா
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஜாமீன்: அவரது தண்டனையை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம் இம்ரான் கான்
    ஜாமீனில் வெளிவந்த இம்ரான் கான் சில மணிநேரத்திற்குள் மீண்டும் கைது  இம்ரான் கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025