NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வாய்ப்பே இல்லை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து!
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாய்ப்பே இல்லை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து!
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து

    வாய்ப்பே இல்லை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 07, 2023
    10:59 am

    செய்தி முன்னோட்டம்

    2023 ஆசிய கோப்பை சர்ச்சை தீவிரமாக சுழன்று கொண்டிருக்கும் நிலையில், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் என பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    சமீபத்திய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கூட்டத்தில், போட்டி நடைபெறும் இடம் குறித்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    அஸ்வின், தனது யூடியூப் சேனலில் பேசுகையில், ஆசிய கோப்பைக்காக பிசிசிஐ அவர்கள் நாட்டுக்கு வர மறுத்தால், இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிப்பது சாத்தியமில்லை என்றார்.

    மேலும் எமிரேட்ஸில் ஏற்கனவே பல போட்டிகள் நடத்தப்பட்டுவிட்டதால், ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறியுள்ளார்.

    ரவிச்சந்திரன் அஸ்வின்

    ஆசிய கோப்பை இடமாற்ற சர்ச்சை

    தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பல காரணங்களால், 2006 ஆம் ஆண்டு பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை.

    இந்நிலையில், 2023 ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்த உள்ள நிலையில், போட்டியை வேறு இடத்திற்கு மாற்றாவிட்டால், இந்தியா விளையாடாது என பிசிசிஐ அறிவித்துவிட்டது.

    இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்ததோடு, இந்தியா வராவிட்டால், ஒருநாள் உலகக்கோப்பையை ஆட தாங்கள் இந்தியா வரமாட்டோம் என கூற, மோதல் தீவிரமடைந்துள்ளது.

    ஏசிசி தலைவராக தற்போது ஜெய் ஷா உள்ள நிலையில், போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற தீவிரம் காட்டி வருவதாகவும், மார்ச் மாதம் நடக்க உள்ள ஏசிசி கூட்டத்தில் இதற்கான முடிவு இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    அஸ்வின் ரவிச்சந்திரன்

    சமீபத்திய

    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்
    2022ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் மீது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்திய ரஷ்யா உக்ரைன்
    வால்மார்ட் தனது பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், வரிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்  வால்மார்ட்
    'எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் உண்மையானவர்கள், மற்றவர்கள் பணத்தால் வாங்கப்பட்டவர்கள்': சர்ச்சையை கிளப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்  எம்எஸ் தோனி

    கிரிக்கெட்

    திட்டமிட்டு இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்வோம்! பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் ஓபன் டாக்! இந்திய அணி
    ரஞ்சி கோப்பை 2022-23 : மும்பைக்கு எதிராக சதமடித்தார் கேதர் ஜாதவ்! ரஞ்சி கோப்பை
    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ! ஐபிஎல்
    வாஷிங்டன் சுந்தரின் முதல் டி20 அரைசதம் வீணானது! டி20 கிரிக்கெட்

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்? இந்தியா
    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்! டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025