NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஊக்கமருந்து சோதனையில் தோல்வி : இந்திய காமன்வெல்த் சாம்பியன் சஞ்சிதா சானுவுக்கு நான்கு ஆண்டுகள் தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊக்கமருந்து சோதனையில் தோல்வி : இந்திய காமன்வெல்த் சாம்பியன் சஞ்சிதா சானுவுக்கு நான்கு ஆண்டுகள் தடை
    ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த இந்திய காமன்வெல்த் சாம்பியன் சஞ்சிதா சானுவுக்கு நான்கு ஆண்டுகள் தடை

    ஊக்கமருந்து சோதனையில் தோல்வி : இந்திய காமன்வெல்த் சாம்பியன் சஞ்சிதா சானுவுக்கு நான்கு ஆண்டுகள் தடை

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 04, 2023
    08:39 pm

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு முறை காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு, கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததற்காக, தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நான்கு ஆண்டு தடை விதித்துள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் குஜராத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் நடந்த சோதனையின் போது, உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள டிரோஸ்டனோலோன் மெட்டாபொலைட் என்ற அனபோலிக் ஸ்டீராய்டை சஞ்சிதா எடுத்துக் கொண்டது உறுதி செய்யப்பட்டது.

    இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் சஹ்தேவ் யாதவ் இதை உறுதிப்படுத்தினார்.

    நேர்மறை சோதனையின் விளைவாக அவரது தேசிய விளையாட்டு வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படும். இது சஞ்சிதாவுக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகும்.

    சஞ்சிதா சானு

    ஊக்கமருந்து சர்ச்சையில் தொடர்ந்து சிக்கும் சஞ்சிதா சானு

    நவம்பர் 2017 இல் அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன், அனபோலிக் ஸ்டீராய்டு டெஸ்டோஸ்டிரோனுக்கு நேர்மறை சோதனை செய்ததால், 2018 இல் சர்வதேச பளு தூக்குதல் கூட்டமைப்பால் அவர் தடை செய்யப்பட்டார்.

    இருப்பினும், 2020 ஆம் ஆண்டில், சஞ்சிதாவின் மாதிரியைக் கையாள்வதில் ஏற்பட்ட இணக்கமின்மை காரணமாக அவருக்கு எதிரான ஊக்கமருந்து குற்றச்சாட்டை கைவிட்டதால் அப்போது தப்பித்தார்.

    இந்நிலையில், தற்போது தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையிடம் சிக்கி, நான்கு வருட தடையை எதிர்கொண்டுள்ளார்.

    இதற்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்வாரா என்பது குறித்து அவரிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய அணி
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்திய அணி

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் பிரமாண்ட வெற்றி! சச்சின், கோலி பாராட்டு! மகளிர் டி20 உலகக் கோப்பை
    மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம்! இந்திய அணி உலக சாதனை! ஐசிசி
    தேசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப் : 35 கிமீ பிரிவில் புதிய சாதனை படைத்த வீரர்கள்! விளையாட்டு
    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா கிரிக்கெட்

    இந்தியா

    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு தமிழ்நாடு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025