NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சென்னை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்
    சென்னை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்

    சென்னை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 28, 2023
    05:24 pm

    செய்தி முன்னோட்டம்

    தி இந்து லிட் ஃபார் லைஃப் விழாவில் தனது சுயசரிதை புத்தகம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தனது சென்னை தொடர்பு குறித்து மிக உருக்கமாக பேசினார்.

    அக்டோபர் 2009இல், அக்ரம் லாகூரிலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் ஆம்புலன்ஸில் மனைவியின் சிகிச்சைக்காக பயணம் செய்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக விமானம் நிறுத்தப்பட்ட நிலையில் அவரது மனைவி மயக்கமடைந்துள்ளார்.

    தங்களிடம் இந்திய விசா இல்லாததால் செய்வதறியாது அக்ரம் கண்ணீர் விட்ட நிலையில், அங்கிருந்த இந்திய அதிகாரிகள் விசா விவகாரத்தை தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறி, உடனடியாக சென்னை மருத்துவமனையில் மனைவியை அனுமதிக்க அனுப்பி வைத்துள்ளனர்.

    கடினமான காலகட்டத்தில் தனக்கு உதவிய அதிகாரிகளை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

    வாசிம் அக்ரம்

    இந்தியர்களால் கொண்டாடப்படும் வாசிம் அக்ரம்

    லாகூரில் பிறந்த பஞ்சாபியான அக்ரம், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றவர் மேலும் இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் உறவுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அடிக்கடி அழைப்பு விடுத்துள்ளார்.

    தி இந்து நிகழ்வில் பேசியபோது, வாசிம் அக்ரம் 1999இல் சென்னையில் நடந்த பாகிஸ்தானின் புகழ்பெற்ற டெஸ்ட் வெற்றியையும் நினைவு கூர்ந்தார்.

    ஸ்விங் மற்றும் சீம் என இரண்டிலும் மாஸ்டரான அக்ரம் பாகிஸ்தானுக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 23.62 சராசரியில் 414 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    மேலும் அக்ரம் 356 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான கராச்சி கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்

    சமீபத்திய

    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு
    ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சம்பவம் பண்ணியது இப்படித்தான்; வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை அலறவிட்ட பலோச் போராளிகள் பலுசிஸ்தான்
    ஹேக்கிங் அபாயம்; டெஸ்க்டாப்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை கூகுள்
    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி

    கிரிக்கெட்

    கே.எல்.ராகுலை இந்திய அணியில் இருந்து நீக்கி விடலாமா? ChatGPT'யின் சுவாரஸ்ய பதில்! டெஸ்ட் கிரிக்கெட்
    பேட் கம்மின்ஸின் நான்கு ஆண்டு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : டெஸ்ட் தரவரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திற்கு முன்னேற்றம் பந்துவீச்சு தரவரிசை
    மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அலிஷா ஹீலி நியமனம்! மகளிர் ஐபிஎல்
    இந்தியாவில் உலகக்கோப்பையை வெல்வதே இலக்கு : பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்! ஒருநாள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025