
ஐபிஎல் 2025: பிளேஆஃப் சுற்றில் 11 ஆண்டு கால சாதனையை கூட்டாக முறியடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்
செய்தி முன்னோட்டம்
முல்லான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (மே 30) நடந்த அதிக முக்கியத்துவம் வாய்ந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி வீழ்த்தி ஐபிஎல் 2025 இன் குவாலிஃபையர் 2க்கு முன்னேறியது.
இந்த போட்டி ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் அதிகபட்ச ரன் குவிப்புக்கான புதிய சாதனையை படைத்தது.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 436 ரன்கள் குவிக்கப்பட்டு, 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முந்தைய 428 ரன்கள் சாதனையை முறியடித்தது.
முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 228/4 ரன்கள் எடுத்தது.
குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் போராட்டம்
மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 81 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 47 ரன்களும் எடுத்தனர்.
கூடுதலாக, ஐபிஎல் பிளேஆஃப் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரையும் மும்பை அணி இதன் மூலம் பதிவு செய்தது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சன் 80 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களும் எடுத்தாலும், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து குவாலிஃபையர் 2 இல் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.