NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்!
    விளையாட்டு

    படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்!

    படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்!
    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 31, 2023, 03:11 pm 0 நிமிட வாசிப்பு
    படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்!
    லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்

    நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டி20 போட்டியில் ரேங்க் டர்னர் பிட்சை தயார் செய்ததற்காக, லக்னோ பிட்ச் கியூரேட்டர் நீக்கப்பட்டுள்ளார். லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஜனவரி 29 அன்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா 19.5 ஓவர்களில் தான் இலக்கை எட்டி வென்றது. இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கு முன்னதாக லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சஞ்சீவ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளதாக, பிடிஐ செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) தெரிவித்துள்ளது.

    புதிய கியூரேட்டர் சஞ்சீவ் குமார் அகர்வால் பின்னணி

    புதிய பிட்ச் கியூரேட்டராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் குமார் அகர்வால் இதற்கு முன்பு வங்கதேசத்தில் பிட்ச்களை தயார் செய்த அனுபவம் கொண்டுள்ளார். வங்கதேசத்தில் கடந்த அக்டோபரில் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது லக்னோ பிட்சை தயார் செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் ஐபிஎல் வரும் நிலையில், அதற்கு ஏற்றவாறு பிட்சை தயார் செய்ய, மூத்த பிசிசிஐ கண்காணிப்பாளர் தபோஷ் சாட்டர்ஜியுடன் அவர் இணைந்து பணியாற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அகர்வால் மிகவும் திறமையான பிட்ச் கியூரேட்டர் என்றும், பிட்ச் நிலைமையை இன்னும் ஒரு மாதத்த்திற்குள் உரிய தரத்தில் தயார் செய்து விடலாம் என உத்தரபிரதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக பிடிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    கிரிக்கெட்
    டி20 கிரிக்கெட்

    சமீபத்திய

    புதுச்சேரியில் 11 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு புதுச்சேரி
    சற்று சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் வீடியோ

    கிரிக்கெட்

    2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நியூசிலாந்து டி20 அணியின் கேப்டனாக டாம் லாதம் நியமனம் டி20 கிரிக்கெட்
    2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வெளியானது: ஜடேஜாவுக்கு ஜாக்பாட்! பிசிசிஐ
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023

    டி20 கிரிக்கெட்

    பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வெற்றி : வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்
    மீண்டும் அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் முகமது நபி : ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு கிரிக்கெட்
    டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 9,000 ரன்கள் : கோலி, கெயிலை பின்னுக்குத் தள்ளி பாபர் அசாம் சாதனை கிரிக்கெட்
    வாவ் சொல்ல வைத்த வங்கதேசம் : இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது கிரிக்கெட்

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023