NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்!
    லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்

    படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 31, 2023
    03:11 pm

    செய்தி முன்னோட்டம்

    நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டி20 போட்டியில் ரேங்க் டர்னர் பிட்சை தயார் செய்ததற்காக, லக்னோ பிட்ச் கியூரேட்டர் நீக்கப்பட்டுள்ளார்.

    லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஜனவரி 29 அன்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 99 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா 19.5 ஓவர்களில் தான் இலக்கை எட்டி வென்றது.

    இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கு முன்னதாக லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சஞ்சீவ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளதாக, பிடிஐ செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) தெரிவித்துள்ளது.

    சஞ்சீவ் குமார் அகர்வால்

    புதிய கியூரேட்டர் சஞ்சீவ் குமார் அகர்வால் பின்னணி

    புதிய பிட்ச் கியூரேட்டராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் குமார் அகர்வால் இதற்கு முன்பு வங்கதேசத்தில் பிட்ச்களை தயார் செய்த அனுபவம் கொண்டுள்ளார்.

    வங்கதேசத்தில் கடந்த அக்டோபரில் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது லக்னோ பிட்சை தயார் செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    விரைவில் ஐபிஎல் வரும் நிலையில், அதற்கு ஏற்றவாறு பிட்சை தயார் செய்ய, மூத்த பிசிசிஐ கண்காணிப்பாளர் தபோஷ் சாட்டர்ஜியுடன் அவர் இணைந்து பணியாற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    அகர்வால் மிகவும் திறமையான பிட்ச் கியூரேட்டர் என்றும், பிட்ச் நிலைமையை இன்னும் ஒரு மாதத்த்திற்குள் உரிய தரத்தில் தயார் செய்து விடலாம் என உத்தரபிரதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக பிடிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டி20 கிரிக்கெட்

    யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! U19 உலகக்கோப்பை
    ஐசிசி சிறந்த ஆடவர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! மூன்று இந்திய வீரர்களுக்கு இடம்! ஐசிசி
    ஐசிசி சிறந்த மகளிர் டி20 அணி 2022 பட்டியல் வெளியீடு! நான்கு இந்தியர்களுக்கு இடம்! ஐசிசி
    ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா வெற்றி! பெண்கள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    ரஞ்சி கோப்பை 2022-23: தெரிந்ததும் தெரியாததும்! தமிழ்நாடு
    வரலாற்றில் முதன்முறையாக 108 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இந்தியா
    பிக் பாஷ் லீக் முடிந்தவுடன் ஓய்வு! கிரிக்கெட் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் அறிவிப்பு!! விளையாட்டு
    42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி! ரஞ்சி கோப்பையில் சரித்திரம் படைத்த டெல்லி அணி! ரஞ்சி கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025