LOADING...
பாதுகாப்பு காரணங்களால் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரிலிருந்து கோனெரு ஹம்பி விலகல்: அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு?
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரிலிருந்து கோனெரு ஹம்பி விலகல்

பாதுகாப்பு காரணங்களால் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரிலிருந்து கோனெரு ஹம்பி விலகல்: அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 23, 2026
11:38 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர போர் காரணமாக, சைப்ரஸில் நடைபெறவுள்ள 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை கோனெரு ஹம்பி விலகியுள்ளார். மார்ச் 28 அன்று சைப்ரஸின் பாப்ஹோஸ் நகரில் தொடங்கவுள்ள இந்தத் தொடர், உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான சவாலாளரை தீர்மானிக்கும் முக்கியத் தொடராகும். இருப்பினும், போர் பதற்றம் நிலவும் சூழலில் அங்குள்ள பாதுகாப்பு குறித்து ஹம்பி கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, மார்ச் 1-ம் தேதி சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் விமானப்படை தளம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், மின்சாரத் தடை போன்ற சம்பவங்கள் வீரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. "தற்போதைய சூழலில் இது கடினமான ஆனால் அவசியமான முடிவு," என ஹம்பி தெரிவித்துள்ளார்.

அபராதம்

அபராதம் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) விதிமுறைப்படி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு போதுமான காரணமின்றி விலகும் வீரர்களுக்கு 10,000 யூரோ (சுமார் ₹10.81 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஹம்பியின் இந்த விலகல் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஹம்பி விலகியதைத் தொடர்ந்து, 2024-25 மகளிர் தொடர் வரிசையில் அடுத்த இடத்தில் உள்ள அன்னா முசிச்சுக் அவருக்குப் பதிலாகப் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்தியாவின் டி. குகேஷ் (ஆண்கள் பிரிவு) மற்றும் சீனாவின் ஜூ வென்ஜூன் (பெண்கள் பிரிவு) ஆகியோரின் பட்டங்களுக்கு சவால் விடப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இந்தத் தொடர், போர் மேகங்களுக்கு மத்தியிலேயே திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement