LOADING...
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!

எழுதியவர் Sekar Chinnappan
May 11, 2023
05:21 pm

செய்தி முன்னோட்டம்

அஜர்பைஜானின் பாகுவில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவ்யா தடிகோல் சுப்பராஜு மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தங்கம் வென்றது. தங்கத்துக்காக போட்டியில் செர்பிய ஜாம்பவான்களான டாமிர் மைக் மற்றும் ஜோரானா அருனோவிச் ஆகியோரை எதிர்கொண்ட இந்திய ஜோடி 16-14 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார்கள். கடந்த மார்ச் மாதம் போபாலில் நடந்த தனிநபர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெற்றி பெற்ற சரப்ஜோத்துக்கு இது இரண்டாவது ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை தங்கமாகும். இந்தியா தற்போது பதக்கப்பட்டியலில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post