LOADING...
ஐபிஎல் ஏலம் 2026: வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.18 கோடியாக நிர்ணயம்
புதிய விதி காரணமாகவே வெளிநாட்டு வீரர்களின் சம்பளம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஐபிஎல் ஏலம் 2026: வெளிநாட்டு வீரர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.18 கோடியாக நிர்ணயம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 16, 2025
11:24 am

செய்தி முன்னோட்டம்

இன்று அபுதாபியில் நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, வெளிநாட்டு வீரர்களுக்கான அதிகபட்ச ஊதியத்தை BCCI ரூ. 18 கோடியாக நிர்ணயித்துள்ளது. "அதிகபட்ச கட்டண விதி" என்ற பிசிசிஐயின் புதிய விதி காரணமாகவே வெளிநாட்டு வீரர்களின் சம்பளம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, ஒரு வெளிநாட்டு வீரர் ஏலத்தில் அதிகபட்சமாகப் பெறக்கூடிய தொகை என்பது, அதிகபட்ச தக்கவைப்பு ஸ்லாப் தொகையில் எது குறைவாக உள்ளதோ அதுவாக இருக்கும். முந்தைய மெகா ஏலத்தில் அதிகபட்ச விலைக்குப் போன வீரரின் (ரிஷப் பந்த் - ரூ. 27 கோடி) தொகையையும், அதிகபட்ச தக்கவைப்பு தொகையையும் (ரூ. 18 கோடி) ஒப்பிடுகையில், ரூ. 18 கோடி குறைவாக உள்ளதால், வெளிநாட்டு வீரர்களுக்கு இதுவே அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவரங்கள்

ஏலம் குறித்த மற்ற விவரங்கள்

இது மெகா ஏலம் இல்லாததால், இந்த ஆண்டு 'மார்quee set' என்ற பிரிவு ஏலத்தில் இல்லை. ஏலம், முதலில் தரப்படுத்தப்பட்ட பேட்டர்கள் (Capped batters) பட்டியலுடன் தொடங்கும். மொத்தம் 1355 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், இறுதியாக 359 வீரர்கள் (244 இந்தியர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள்) ஏலப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணிகளுக்கு அதிகபட்சமாக 77 இடங்கள் மட்டுமே உள்ளன. இதில் வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள் 31. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அதிகபட்சமாக 13 இடங்களையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி 10 இடங்களையும் நிரப்ப வேண்டியுள்ளது.

Advertisement