NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / அதெல்லாம் வெறும் வதந்தி; விராட் கோலி கேப்டன்சி குறித்த தகவல்களை நிராகரித்தது ஆர்சிபி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதெல்லாம் வெறும் வதந்தி; விராட் கோலி கேப்டன்சி குறித்த தகவல்களை நிராகரித்தது ஆர்சிபி
    விராட் கோலி கேப்டன்சி தொடர்பான தகவல்களை வதந்தி என நிகாரித்தது ஆர்சிபி

    அதெல்லாம் வெறும் வதந்தி; விராட் கோலி கேப்டன்சி குறித்த தகவல்களை நிராகரித்தது ஆர்சிபி

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 03, 2024
    07:36 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனுக்கான அணியின் கேப்டனாக விராட் கோலி திரும்புவார் என்ற வதந்திகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) நிர்வாகம் நிராகரித்துள்ளது.

    2021இல் விராட் கோலி கேப்டன்சி பதவியிலிருந்து விலகிய பிறகு மூன்று சீசன்களுக்கு கேப்டனாக இருந்த ஃபாஃப் டு பிளெசிஸை, ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஆர்சிபி விடுவித்தது.

    இதனால், விராட் கோலி மீண்டும் கேப்டன்சி பொறுப்பை ஏற்பார் என்ற வதந்தி பரவத் தொடங்கியது.

    இந்நிலையில், ஆர்சிபி அணியின் கிரிக்கெட் இயக்குனர் மோ போபாட், ஜியோசினிமாவுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் வதந்திகள் பற்றி பேசினார்.

    விராட் கோலி மீண்டும் கேப்டனாக திரும்புவது குறித்த கேள்விக்கு, அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    கேப்டன் பதவி ஆசைகள்

    விராட் கோலியின் ஆர்வம் மற்றும் தக்கவைப்பு விவரங்கள்

    ஃபாஃப் டு பிளெசிஸை தக்கவைக்காமல் போனதால், ஐபிஎல் 2025இல் யார் அணியை வழிநடத்துவது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

    விராட் கோலி தனது கேப்டன் பதவியை திரும்பப் பெற ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆனால், அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அதை உறுதிப்படுத்தவில்லை. சமீபத்திய தக்கவைப்பு அறிவிப்புகளில், ₹21 கோடியில் தக்கவைக்கப்பட்ட இந்திய வீரர் விராட் கோலி தக்கவைப்பு பட்டியலில் அதிக தொகையைப் பெற்றுள்ளார்.

    ஆர்சிபி மேலும் ரஜத் படிதார் (₹11 கோடி) மற்றும் யாஷ் தயாள் (₹5 கோடி) ஆகியோரையும் தக்கவைத்துள்ள நிலையில், ஐபிஎல் 2025க்கான ஏலப் பணத்தில் ₹83 கோடி மீதம் வைத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விராட் கோலி
    ஆர்சிபி
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    விராட் கோலி

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் மல்யுத்தம்
    'இதுதான் எல்லாம்'; டெஸ்ட் கிரிக்கெட் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி டெஸ்ட் மேட்ச்
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் : மீண்டும் அணியில் இணைந்தார் விராட் கோலி இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    Sports Round Up: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தடுமாற்றம், இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா நிதானம்; இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா

    ஆர்சிபி

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    RCB அணி பெயர் மாற்றம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்றம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    RCB vs LSG : ஐபிஎல் 2024 வரலாற்றில் முதல்முறையாக ஆல்-அவுட் ஆனது பெங்களூரு அணி ஐபிஎல்
    RCB -SRH போட்டி: வைரலாகும் காவ்யா மாறனின் ரியாக்ஷன்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    நானும் விராட்கோலி ரசிகை - ஆர்சிபியை புகழ்ந்த ரஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோ விராட் கோலி
    டேவிட் வில்லிக்கு பதிலாக கேதார் ஜாதவை ஒப்பந்தம் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல்
    ஆர்சிபி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! ஐபிஎல்
    ஆர்சிபி vs எல்எஸ்ஜி : காயத்தால் பாதியில் வெளியேறிய கே.எல்.ராகுல்! எல்எஸ்ஜி அணியின் கேப்டனாக செயல்படும் க்ருனால் பாண்டியா! லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    ஐபிஎல்

    RCB vs CSK: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ்
    RCBக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் எம்எஸ் தோனி  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    தனியுரிமையை மீறியதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை சாடிய ரோஹித் ஷர்மா  ரோஹித் ஷர்மா
    ரோஹித் ஷர்மாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரோஹித் ஷர்மா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025