NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்
    ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 09, 2025
    08:55 am

    செய்தி முன்னோட்டம்

    தரம்சாலாவில் வியாழக்கிழமை (மே 8) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 சீசன் தொடர்ந்து நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில், அருகிலுள்ள ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து தரம்சாலா போட்டியை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், மீதமுள்ள போட்டிகளின் எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கு உயர்மட்டக் கூட்டம் நடத்தப்படும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாக, ஸ்போர்ட்ஸ் நவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    முடிவு

    விவாதித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு

    "தற்போதைக்கு எதுவும் இறுதியானது அல்ல. நிலைமை தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நாளை அதை மதிப்பாய்வு செய்வோம்," என்று ராஜீவ் சுக்லா கூறினார்.

    மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த உத்தரவும் இல்லாத நிலையில், வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க பிசிசிஐ விரைவாக செயல்பட்டது.

    உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு அணிகளை அழைத்துச் செல்ல சிறப்பு வந்தே பாரத் ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஜம்முவில் விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததாலும், வெடிப்பு போன்ற சத்தங்கள் கேட்டதாலும் பதான்கோட், அமிர்தசரஸ், ஜலந்தர், ஹோஷியார்பூர், மொஹாலி மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் பரவலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    வெளிநாட்டு வீரர்கள்

    வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப கோரிக்கை

    இதற்கிடையே, ஐபிஎல்லில் விளையாடி வரும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கள் தாய்நாடு திரும்புவதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.

    ஐபிஎல்லில் வீரர்கள் மட்டுமல்லாது, பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் என பல வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போதைய இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தால், அவர்கள் பலரும் நாடு திரும்ப விரும்புகின்றனர்.

    பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு, வீரர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை மிகவும் பாதுகாப்பான இடங்களில் பிசிசிஐ தங்கவைத்துள்ளது.

    இதையடுத்து, விரைவில் போட்டி ஐபிஎல் 2025 செய்யப்பட்டு வீரர்கள் திருப்பி அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல் ஐபிஎல் 2025
    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா

    ஐபிஎல் 2025

    ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் ஐபிஎல்
    டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஒரு மைதானத்தில் 3,500 ரன்கள் குவித்து விராட் கோலி இமாலய சாதனை விராட் கோலி
    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல்
    400 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய நான்காவது இந்தியர்; எம்எஸ் தோனி புதிய சாதனை எம்எஸ் தோனி

    ஐபிஎல்

    IPL 2025 SRH-MI: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு BCCI அஞ்சலி செலுத்துகிறது ஐபிஎல் 2025
    என்னதான் பிரச்சினை? ஐபிஎல் 2025 பவர்பிளேவில் தொடர்ந்து தடுமாறும் சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில் வரலாற்று மைல்கல்லை எட்டுவாரா விராட் கோலி? விராட் கோலி
    ஐபிஎல் 2025 எம்ஐvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025

    டி20 கிரிக்கெட்

    ஐபிஎல்லில் அறிமுக பந்திலேயே சிக்சர் அடித்தவர்கள்; வைபவ் சூரியவன்ஷி எத்தனையாவது வீரர்? ஐபிஎல்
    ஐபிஎல் 2025 பிபிகேஎஸ்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் அதிக 50+ ஸ்கோர்கள்; டேவிட் வார்னரை விஞ்சி விராட் கோலி புதிய சாதனை விராட் கோலி
    ஐபிஎல் 2025 எம்vsசிஎஸ்கே : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025

    கிரிக்கெட்

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிலிருந்து கவுதம் காம்பிருக்கு கொலை மிரட்டல் கவுதம் காம்பிர்
    தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு பஹல்காம்
    பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்: சவுரவ் கங்குலி சவுரவ் கங்குலி
    ஐபிஎல்லில் வேகமாக 4,000 ரன்களை எட்டிய இந்தியர்; சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ் சூர்யகுமார் யாதவ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025