LOADING...
ஐபிஎல் 2025: பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து முதல் அணியாக வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்; மோசமான சாதனை படைக்க வாய்ப்பு
பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே

ஐபிஎல் 2025: பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து முதல் அணியாக வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்; மோசமான சாதனை படைக்க வாய்ப்பு

எழுதியவர் Sekar Chinnappan
May 01, 2025
12:23 pm

செய்தி முன்னோட்டம்

2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல் 2025) சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஒரு ஏமாற்றம் அளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி 49வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் நடப்பு சீசனில், பிளேஆஃப் சுற்றுக்கான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது. முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 190 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் நான்கு பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.

சோகம்

17 வருடங்களில் இல்லாத சோகம்

17 வருட ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, சீசனின் முடிவில் கடைசி இடத்தை பிடிக்கும் அபாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இதற்கு முன்பு, 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் கடைசி இடத்திற்கு முந்தைய இடத்தைப் பிடித்து இருந்தது. 2024 ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த பிறகு, அந்த அணி இப்போது தொடர்ச்சியான சீசன்களில் பிளேஆஃப்களுக்கு தகுதி பெறத் தவறிவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி பொறுப்பேற்றும் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், ரசிகர்களிடையே போட்டி மீதான ஆர்வம் குறைந்துள்ளது.