Page Loader
ஐபிஎல் 2024 : ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம்
ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம்

ஐபிஎல் 2024 : ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 12, 2023
02:35 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் இறுதிக்கட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 19இல் துபாயில் ஏலம் நடைபெற உள்ளது. 1,166 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தங்கள் பெயரை பதிவு செய்திருந்த நிலையில், 333 வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 214 இந்தியர்களும், 119 வெளிநாட்டினரும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை தொகையான ரூ.2 கோடியில் ஹர்சல் படேல், ஷர்துல் தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய மூன்று பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். ஓரிரு சீசன்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் விடுவிக்கப்பட்டார். மறுபுறம், ஷர்துல் தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ், 2023 சீசனுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டனர்.

IPL 2024 11 Indians in Rs 50 lakshs base price

ரூ.50 லட்சம் அடிப்படை தொகை பிரிவில் 11 இந்தியர்கள்

ரூ.1.5 கோடி மற்றும் ரூ.1 கோடி பிரிவில் எந்த இந்திய வீரர்களும் இல்லை. இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ள அடுத்த பிரிவு ரூ.50 லட்சமாகும். 50 லட்சம் விலையில் மொத்தம் 11 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் மனீஷ் பாண்டே, கருண் நாயர், ஜெய்தேவ் உனத்கட், சேத்தன் சகாரியா, சிவம் மாவி, கேஎஸ் பாரத், சந்தீப் வாரியர், பரிந்தர் ஸ்ரான், சித்தார்த் கவுல், வருண் ஆரோன், ஹனுமா விஹாரி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட்டில் அரிதானவர்கள் என்பதால், ரூ. 50 லட்சம் மதிப்பில் இடம் பெற்றுள்ள சேத்தன் சகாரியா ஒரு ஐபிஎல் உரிமையாளரிடமிருந்து ஒரு பெரிய தொகையைப் பெறும் வீரராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.