சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டி மழையால் ரத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதும் ஐபிஎல் 2023 தொடரின் 45வது போட்டி மழையால் ரத்தானது. முன்னதாக மே 4 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி, லக்னோவில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக ஒருநாள் முன்பாக மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை (மே 3) மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கவிருந்த நிலையில் மழை காரணமாக 3.45 மணிக்கு தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழை விடாமல் பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.