NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இந்திய அரசு எனக்கு ஆதரவளிக்கவில்லை: வினேஷ் போகட் குமுறல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இந்திய அரசு எனக்கு ஆதரவளிக்கவில்லை: வினேஷ் போகட் குமுறல்
    இந்திய அரசு எனக்கு ஆதரவளிக்கவில்லை: வினேஷ் போகட்

    ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இந்திய அரசு எனக்கு ஆதரவளிக்கவில்லை: வினேஷ் போகட் குமுறல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 25, 2024
    10:57 am

    செய்தி முன்னோட்டம்

    பாரிஸ் ஒலிம்பிக்கில் தான் சந்தித்த பிரச்சனைகளின் போது தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று வினேஷ் போகட் கூறினார்.

    30 வயதான வினேஷ் போகட் மல்யுத்தத்தில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் பயணத்தில் முன்னேறிய நிலையில், கூடுதல் எடை காரணமாக ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    எனினும், வினேஷ் தனது வெள்ளிப் பதக்கத்தைத் தக்கவைக்குமாறு முறையிட்டார்.

    ஆனால் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது. இந்திய ஒலிம்பிக் சங்கமும் இந்த முடிவுக்கு பதிலளித்து, வினேஷ் விவகாரத்தில் சட்டப்பூர்வ உதவியை நாடப்போவதாக கூறியது.

    சாடல் 

    நிர்வாகத்தை சாடிய வினேஷ்

    இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, வினேஷ் போகட் இறுதி போட்டிக்கு முன்னேறும் வரை அவரை யாருமே தொடர்பு கொள்ளவுமில்லை, உற்சாகப்படுத்தவும் இல்லை என்கிறார்.

    "நான் இறுதிப் போட்டிக்கு வருவதற்கு முன்பு வரை, எனக்கு எந்த அழைப்பும் யாரிடமிருந்தும் வரவில்லை. அதன்பிறகு, அவர்கள் என்னை ஆதரிப்பதாக எனக்கு அழைப்பு வந்தது, ஆனால் நான் பொதுக் காட்சியாக மாற விரும்பவில்லை. அவர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் என்னை தனியாக அழைத்து, 'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்று கூறியிருக்கலாம், அது எனக்கு இன்னும் அதிக ஆதரவாக இருந்திருக்கும்," என்று கூறினார்.

    இந்திய அரசு தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றும், ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட் மூலம் தான் தனக்கு உதவி கிடைத்தது என்றும் வினேஷ் குற்றம் சாட்டினார்.

    வருத்தம்

    IOA பற்றி வருந்திய வினேஷ்

    ஒலிம்பிக் போட்டியின் போது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ​​தனது அனுமதியின்றி படங்கள் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் வினேஷ் கூறியுள்ளார்.

    "சக விளையாட்டு வீரர்களாக, அவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு எங்களுடன் நிற்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். நான் அரை மயக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ​​அவர்கள் என் அனுமதியின்றி என்னைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர், உண்மையில் எதுவும் சரியாக இல்லாதபோது நான் நன்றாக இருப்பதாகக் கூறினர்" என வருத்தம் தெரிவித்தார்.

    மத்திய அரசு 

    மத்திய அரசு தனக்கு உதவவில்லை

    மத்திய அரசும் தனக்கு உதவவில்லை என்கிறார் வினேஷ்.

    "அவர்கள் உண்மையில் எனக்கு என்ன வசதிகளை வழங்கினர் என்று நான் கேட்க விரும்புகிறேன்? எனக்கு பயிற்சியாளர் கொடுத்தது யார்? எனக்கு ஒரு பயிற்சியாளர் கூட அரசு வழங்கவில்லை. இவை அனைத்தும் OGQ போன்ற தனியார் ஸ்பான்சர்களிடமிருந்து வந்தது".

    "அவர்கள் பயிற்சியாளர், பிசியோவை வழங்கினர் மற்றும் அனைத்து நிதிகளையும் கையாண்டனர். அரசாங்கம் பொய் சொல்கிறது," என்று வினேஷ் மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வினேஷ் போகட்
    மத்திய அரசு
    மல்யுத்த போட்டி
    மல்யுத்தம்

    சமீபத்திய

    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்
    தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை
    இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம் தோல்வி; ஏவப்பட்ட சில நிமிடங்களில் EOS-09 மாயம் இஸ்ரோ

    வினேஷ் போகட்

    EXPLAINER: வினேஷ் போகட் ஏன் ஒலிம்பிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்? மல்யுத்த எடை விதிகள் என்ன? மல்யுத்தம்
    'வாய்ப்புகளை ஆராயுங்கள்...': வினேஷின் ஒலிம்பிக் தகுதி நீக்கம் குறித்து பி.டி.உஷாவிடம் மோடி அறிவுறுத்தல் ஒலிம்பிக்
    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: வினேஷ் போகட் தகுதி நீக்கம், அடுத்து என்ன நடக்கும்? விளையாட்டு
    ஒலிம்பிக் தகுதி நீக்கத்தினை தொடர்ந்து ஓய்வை அறிவித்தார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மல்யுத்த போட்டி

    மத்திய அரசு

    "லேட்டரல் என்ட்ரி விளம்பரத்தை ரத்து செய்யுங்கள்": UPSC தலைவருக்கு மத்திய அமைச்சர் உத்தரவு யுபிஎஸ்சி
    ஜன் போஷன் கேந்திரா: 4 மாநில ரேஷன் கடைகளுக்கு புதிய பெயர் சூட்டியுள்ள மத்திய அரசு மாநில அரசு
    கான்வொகேஷன் டிரஸ் கோட்களை வரையறுக்குமாறு மருத்துவ நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல் மருத்துவக் கல்லூரி
    இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நோட்டீஸை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு இன்ஃபோசிஸ்

    மல்யுத்த போட்டி

    'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி! இந்தியா
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 'இறுதி சுற்று' நடிகை ரித்திகா சிங்  இந்தியா
    யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக் மல்யுத்தம்
    இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தற்காலிக தடை விதித்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு மல்யுத்தம்

    மல்யுத்தம்

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி உலக சாம்பியன்ஷிப்
    Sports Round Up: இந்திய பாய்மர படகு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம்; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் ஆண்டிம் பங்கால் மல்யுத்த போட்டி
    Sports Round Up: மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைக்கு வெண்கலம்; இந்திய வாலிபால் அணி காலிறுதிக்கு தகுதி; டாப் விளையாட்டு செய்திகள் இந்திய அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025