LOADING...
இந்தியா vs இலங்கை போட்டிக்கு மீண்டும் டிக்கெட் விற்பனை செய்த பிசிசிஐ
இந்தியா vs இலங்கை போட்டிக்கு மீண்டும் டிக்கெட் விற்பனை செய்த பிசிசிஐ

இந்தியா vs இலங்கை போட்டிக்கு மீண்டும் டிக்கெட் விற்பனை செய்த பிசிசிஐ

எழுதியவர் Sekar Chinnappan
Oct 26, 2023
05:39 pm

செய்தி முன்னோட்டம்

பிசிசிஐ, இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்று போட்டிக்கான டிக்கெட் விற்பனையை மீண்டும் மேற்கொண்டுள்ளது. இதன்படி, நவம்பர் 2ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ள இந்தியா vs இலங்கை இடையே போட்டிக்கான டிக்கெட் விற்பனை அக்டோபர் 26ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கியது. எனினும், விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட் விற்பனை முழுமையாக முடிவடைந்துவிட்டது. குறிப்பிடத்தக்க வகையில், ஆட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்தியாவின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பிசிசிஐ வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, பிசிசிஐ ஆனது பாகிஸ்தான் உடனான இந்தியாவின் போட்டிக்கான டிக்கெட்டுகளை மீண்டும் விற்பனை செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement