இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : இந்தியாவின் தொடர் தோல்விக்கு காரணம் இதுதான்
ஆடவர் இந்திய கிரிக்கெட் அணி உலகம் முழுவதும் பல்வேறு சூழ்நிலைகளில் தங்களது சிறப்பான வெளிப்படுத்தி வருகிறது. இருப்பினும், அவர்களின் புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வடுவாக, தென்னாப்பிரிக்காவில் தொடரை வெல்ல முடியாமல் இருப்பது எப்போதும் இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் வெற்றிகள் உட்பட சமீபத்திய ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் இருந்தபோதிலும், இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவை வெல்வதில் சவால்களை எதிர்கொண்டன. குறிப்பாக, இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான 30 ஆண்டுகளுக்கும் மேலான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியா நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில், இந்தியா தோல்வியைத் தழுவுவதன் பின்னணியில் உள்ள காரணங்களை இதில் பார்க்கலாம்.
இந்திய அணிக்கான முதன்மை சவால்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக அந்த அந்நாட்டு மண்ணில் இந்தியாவுக்கான முதன்மையான சவாலானது, பவுன்ஸ் மற்றும் மூவ்மென்ட் வழங்கும் வேகத்திற்கு ஏற்ற ஆடுகளங்களை குறிப்பிடலாம். இவை முந்தைய காலகட்டங்களில் இந்திய வீரர்களுக்குப் பழக்கமில்லாத மைதான நிலைமைகள் ஆகும். ஆலன் டோலண்ட், ஷான் பொல்லாக், மக்காயா என்டினி, டேல் ஸ்டெய்ன் மற்றும் இப்போது ககிசோ ரபாடா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த பிட்ச் நிலைமையில் இந்தியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர். இந்தியா இதுவரை தென்னாப்பிரிக்காவிற்கு எட்டு முறை டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக சுற்றுப்பயணங்களைச் செய்துள்ளது. அதில் முதல் தொடர் 1992/93 சமயத்தில் நடைபெற்றது. முகமது அசாருதின் தலைமையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
அன்னிய நிலைமைகள்
தென்னாப்பிரிக்காவிற்கு இந்தியா மேற்கொண்ட முதல் சுற்றுப்பயணத்தின்போது கண்டிஷனிங் கேம்ப் அல்லது பயிற்சி போட்டிகள் எதுவும் இல்லை. சுற்றுப்பயண ஆடைகளைப் பெறுவதற்கும் பாரம்பரிய அணி புகைப்பட அமர்வில் பங்கேற்பதற்கும் மட்டுமே வீரர்கள் புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மும்பையில் கூடியிருந்தனர். அரசியல் காரணங்களால் பல ஆண்டுகள் கிரிக்கெட்டில் இருந்து தடை விதிக்கபப்ட்டாலும், தென்னாப்பிரிக்கா வீரர்கள் மிகச் சிறப்பாக அந்த தொடரில் செயல்பட்டனர். முதல் சுற்றுப்பயணத்தில் தோற்ற நிலையில், 1996/97 மற்றும் 2001/02 சமயத்தில் மீண்டும் சென்ற இந்திய கிரிக்கெட் அணியால் ஒரு வெற்றியைக் கூட பெற முடியவில்லை.
இந்தியா பெற்ற முதல் வெற்றி
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சுற்றுப்பயணங்களுக்கு முன் சிறந்த பயிற்சி ஆகியவற்றுடன், இந்திய பந்துவீச்சாளர்கள் அதன் பின்னர் சிறப்பாக செயல்படத் தொடங்கினர். இதையடுத்து 2006இல் தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணி, கிரேம் ஸ்மித் தலைமையிலான தென்னாப்பிரிக்காவை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் டெஸ்டில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் தலைமையில்தான் அப்போது இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 1-0 என முன்னிலை பெற்றாலும், அதன் பின்னர் அடுத்தடுத்த போட்டிகளில் தோற்று தோற்று தொடரை இழந்தது.
எம்எஸ் தோனியின் கீழ் இந்தியா
2010-11 சுற்றுப்பயணத்திற்கு எம்எஸ் தோனி கேப்டனாக இருந்தார் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றது. செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், ஹர்பஜன் சிங்கின் 4/10 இந்தியா 205 ரன்களுக்கு பிறகு டர்பனில் நடந்த இரண்டாவது ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவை 131 ரன்களுக்கு கட்டுப்படுத்த உதவியது. விவிஎஸ் லக்ஷ்மணின் அதிரடியான பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது. அதன்பிறகு, 2013 இல், மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியா 0-1 என தொடரை இழந்தது.
விராட் கோலியின் கீழ் இந்தியா
2017-18 சீசனில், விராட் கோலி தலைமையிலான இந்தியா, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா படுதோல்வியை சந்தித்த நிலையிலும், மூன்றாவது டெஸ்டில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-2 என்ற கணக்கில் முடித்தது. ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி, ஒயிட்வாஷைத் தவிர்த்தனர். பின்னர் 2021-22 சீசனில் இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்று சிறப்பாக தொடங்கினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தோற்று 1-2 என தொடரை இழந்தது. இந்நிலையில், ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணி 31 ஆண்டுகால சோக வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.