5 முறை உலக சாம்பியன் பிரேசில் இந்தியா வருகிறது; கொல்கத்தா விவேகானந்தா மைதானத்தில் அக்.3-ல் மெகா கால்பந்து போட்டி
செய்தி முன்னோட்டம்
இந்திய கால்பந்து வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 5 முறை உலகக் கோப்பை சாம்பியனான பிரேசில் தேசிய அணி, இந்திய அணிக்கு எதிரான சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டி வரும் அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற விவேகானந்தா யுவபாரதி கிரீடங்கன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தகவலை பிரேசில் கால்பந்து கூட்டமைப்பும் (CBF) மற்றும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் (AIFF) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. பிரேசில் ஆண்கள் மூத்த கால்பந்து அணி இந்திய மண்ணில் கால் பதித்து விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Da Austrália para a Índia 🇧🇷🇮🇳
— brasil (@CBF_Futebol) July 30, 2026
A agenda da Seleção Brasileira continua.
Depois dos amistosos na Austrália, nosso próximo destino será a Índia, onde escreveremos um capítulo inédito da nossa história.
No dia 3 de outubro, a Seleção entrará em campo pela primeira vez em solo… pic.twitter.com/UNbhtNU3we
பரிசு
இந்திய ரசிகர்களின் அன்பிற்குப் பரிசளித்த பிரேசில்
சமீபத்தில் நிறைவடைந்த 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் போது, இந்திய ரசிகர்கள், குறிப்பாக கொல்கத்தா மக்கள், பிரேசில் அணிக்கு அளித்த பிரம்மாண்ட ஆதரவும் கொண்டாட்டங்களும் சமூக வலைதளங்களில் உலக அளவில் வைரலானது.
இதன் தொடர்ச்சியாகவே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி சாத்தியமாகியுள்ளது.
"ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, எங்கள் அடுத்த பயணம் இந்தியாதான். உலகிலேயே பிரேசில் அணிக்கு அதிக சர்வதேச ரசிகர்களைக் கொண்ட இந்தியாவில், அக்டோபர் 3 அன்று முதன்முறையாக நாங்கள் களம் இறங்குகிறோம். தலைமுறை தலைமுறையாகப் பிரேசில் கால்பந்தை நேசிக்கும் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்."
தரவரிசை
சர்வதேச தரவரிசை
1992-ல் ஃபிஃபா தரவரிசை முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, இந்திய அணி சந்திக்கப் போகும் மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள அணி பிரேசில் (தற்போது உலகளவில் 5-வது இடம்) ஆகும்.
மார்கின்ஹோஸ் தலைமையில் கேசிமிரோ, மேதேயுஸ் குன்ஹா போன்ற நட்சத்திர வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடிய பிறகு பிரேசில் அணி கொல்கத்தா வந்தடையும்.