
Ind vs NZ: சதமடித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவிய ஸ்ம்ரிதி மந்தனா
செய்தி முன்னோட்டம்
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்தியா வந்த நியூசிலாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கலந்து கொண்டது.
இரு அணிகளும் ஒரு வெற்றியுடன் 1-1 என சமனில் இருந்தது. கடைசி போட்டி நேற்று அகமதாபாத்தில் நடந்தது.
இதில் டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு ஜார்ஜியா (39), இசபெல்லா (25) பயனுள்ள ரன்களை குவித்தனர். இதற்கிடையில் புரூகே 86 ரன் எடுத்தார்.
நியூசிலாந்து அணியிடம் 50 ஓவர்களில் 49.5 ஓவரில் 232 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளும் வீழ்ந்தன. இந்தியாவின் தீப்தி சர்மா 3, பிரியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
சதம்
சதம் அடித்த ஸ்ம்ரிதி மந்தனா
இந்திய அணிக்கு ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் ஷபாலி (12) துவக்கத்தில் நல்ல ரன்களை சேர்த்தனர். யஸ்திகா 35 ரன் எடுத்து அவுட்டானார்.
பின்னர் மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சேர்ந்து வேகமாக ரன் சேர்க்க, இந்தியா வெற்றியை நெருங்கியது.
போட்டியில் ஸ்ம்ரிதி மந்தனா தனது சதத்தை அடித்தார். 3வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்தபோது, மந்தனா (100) அவுட்டானார்.
ஹர்மன்பிரீத் கவுர் (70*) ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 44.2 ஓவரில் 236/4 ரன் அடித்து வெற்றி பெற்றது, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.
இந்திய பெண்கள் ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த வீராங்கனைகளில் முதலிடத்தில் உள்ளவர் மந்தனா. அவர் 88 போட்டிகளில் 8 சதம் அடித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Pre Diwali gift ft. Women in Blue 🥳
— Chennai Super Kings (@ChennaiIPL) October 29, 2024
Smriti century and a series victory!
2⃣ - 1⃣ 🥳 #WhistleForBlue pic.twitter.com/mvLwa5qGG9