
டி20 இன்னிங்ஸ்களில் பவர்பிளேவிற்கு புதிய விதிகளை அறிமுகம் செய்கிறது ஐசிசி
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளின் ஆட்ட நிலைமைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வருகிறது. அதாவது போட்டி நேரம் குறைக்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்படும் சமயங்களில் இன்னிங்ஸ்களில் பவர்பிளே ஓவர்களை தீர்மானிக்க பந்து அடிப்படையிலான முறையை அறிமுகப்படுத்துகிறது. இந்த மாற்றம், பவர்பிளே கால அளவை அருகிலுள்ள முழு ஓவருக்கு மாற்றும் முந்தைய முறையை மாற்றுகிறது. இது குறுகிய வடிவ டி20 கிரிக்கெட்டில் அதிக துல்லியம் மற்றும் அணிகளுக்கு இடையே நியாயத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய விதியின் கீழ், பவர்பிளே இப்போது அருகிலுள்ள பந்தின் அடிப்படையில் முடிவடையும். இது இன்னிங்ஸின் தோராயமாக 30% விகிதத்தைப் பராமரிக்கும்.
புதிய முறை
ஏற்கனவே டி20 பிளாஸ்டில் அமல்
உதாரணமாக, எட்டு ஓவர்கள் கொண்ட போட்டியில், இரண்டு முழு ஓவர்களுக்குப் பிறகு முடிவதற்குப் பதிலாக, மூன்றாவது ஓவரின் இரண்டாவது டெலிவரியின் பிறகு பவர்பிளே முடிவடையும். அந்த இடத்திலிருந்து, மூன்று கூடுதல் பீல்டர்கள் 30-யார்டு வட்டத்திற்கு வெளியே செல்லலாம். இந்த திருத்தப்பட்ட முறை ஏற்கனவே இங்கிலாந்தின் T20 பிளாஸ்டில் நடைமுறையில் உள்ளது, அங்கு இது வீரர்கள் அல்லது அதிகாரிகளுக்கு குழப்பம் இல்லாமல் சீராக செயல்பட்டு வருகிறது. இதன் வெற்றியைக் காரணம் காட்டி, ஐசிசி இதை எதிர்காலத்தில் உலகளாவிய தரநிலையாக அங்கீகரித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட விதி, டி20 போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களுக்கும் சமமாகப் பொருந்தும் என்றும், வானிலை அல்லது பிற தடங்கல்கள் காரணமாக ஓவர்கள் குறைக்கப்படும் அனைத்து எதிர்கால போட்டிகளிலும் இது செயல்படுத்தப்படும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.