Page Loader
'தூங்கவே முடியல' : சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மா பேட்டி
சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மா பேட்டி

'தூங்கவே முடியல' : சிஎஸ்கேவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மா பேட்டி

எழுதியவர் Sekar Chinnappan
May 31, 2023
11:53 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியின் முடிவு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தாலும், மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய மோஹித் ஷர்மாவுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, போட்டியின் கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில், முதல் 4 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சென்னையை அதிர வைத்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்று விடும் என அனைவருமே எதிர்பார்த்த நிலையில், ரவீந்திர ஜடேஜா கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.

mohit sharma interview what he said

இறுதிப்போட்டி குறித்து பேசிய மோஹித் ஷர்மா

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மா கடைசி ஓவர் குறித்து கூறுகையில், "நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தது. இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள நான் போதிய அளவுக்கு பயிற்சி செய்திருக்கிறேன். இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்திருக்கிறேன். எனவே நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களை வீச முடிவு செய்தேன். துரதிர்ஷ்டவசமாக, அது திட்டமிட்டபடி நடக்கவில்லை. ஜடேஜா போட்டியை தங்கள் பக்கம் மாற்றினார். கடைசியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதனால் அன்று என்னால் தூங்க முடியவில்லை." எனக் கூறினார்.