Loading...
'மீண்டும் கேப்டன் பதவி வேணும்': மும்பை இந்தியன்ஸை விட்டு விலகத் திட்டமிட்ட ஹர்திக் பாண்டியா?
ஹர்திக் பாண்டியா முன்வைத்த கேப்டன்ஷிப் நிபந்தனையால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

'மீண்டும் கேப்டன் பதவி வேணும்': மும்பை இந்தியன்ஸை விட்டு விலகத் திட்டமிட்ட ஹர்திக் பாண்டியா?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
01:44 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, மீண்டும் தனது பழைய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் முன்வைத்த கேப்டன்ஷிப் நிபந்தனையால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022-இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமேற்று அறிமுக ஆண்டிலேயே கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் சேர்க்க குஜராத் நிர்வாகம் விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்காக தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில்லிடமும் பேசப்பட்டு சம்மதம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தான் மீண்டும் அணிக்குத் திரும்பினால் கேப்டன் பதவியை மட்டுமே ஏற்க முடியும் என்று பாண்டியா நிபந்தனை விதித்ததால், குஜராத் நிர்வாகம் அந்த முடிவைக் கைவிட்டுள்ளது.

பின்னடைவு

மும்பை இந்தியன்ஸில் பின்னடைவு

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்துப் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்த நிலையில், மும்பை அணியும் பாண்டியாவை கேப்டன் பதவியில் தொடர வைப்பதில் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

ஹார்திக் பாண்டியாவை வர்த்தகம் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ஆகிய அணிகளும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் விசாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்தச் செய்திகளை ஹார்திக் பாண்டியாவின் செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

ADVERTISEMENT