NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
    இனவெறி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

    சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 20, 2023
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கேரி பாலன்ஸ், ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    33 வயதான பாலன்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 16 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார்.

    அங்கு கடைசியாக 2017 இல் இடம் பெற்ற நிலையில் அதன் பிறகு ஃபார்ம் அவுட் மற்றும் இனவெறி சர்ச்சையில் சிக்கியதால் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார்.

    இந்நிலையில், அங்கிருந்து கிளம்பி தனது சொந்த நாடான ஜிம்பாப்வே அணியில் இணைந்த பாலன்ஸ், கடந்த பிப்ரவரியில் விளையாட ஆரம்பித்தார்.

    ஜிம்பாப்வே அணிக்காக ஒருடெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியிலும் இடம்பெற்றார்.

    gary ballance retirement letter

    ஓய்வு குறித்து அறிக்கை வெளியிட்ட கேரி பாலன்ஸ்

    திடீர் ஓய்வு குறித்து கேரி பாலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிகவும் யோசித்த பிறகு, நான் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.

    ஜிம்பாப்வேக்கான எனது நகர்வு விளையாட்டுக்கு புதிய மகிழ்ச்சியை வழங்கும் என்று நான் நம்பினேன்.

    மேலும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காகவும், என்னை அவர்களின் அணியில் வரவேற்றதற்காகவும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

    ஆனால், நான் தொழில்முறை விளையாட்டின் கடுமைக்கு என்னை அர்ப்பணிக்க விரும்பாத நிலையை அடைந்துவிட்டேன்.

    அதையும் மீறி தொடர்ந்தால் இது ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கும் விளையாட்டிற்கும் கேடு விளைவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு
    இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா ஆபரேஷன் சிந்தூர்
    ஐபிஎல் 2025: பிளேஆஃப் சுற்றில் 11 ஆண்டு கால சாதனையை கூட்டாக முறியடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2025

    கிரிக்கெட்

    காலில் காயமடைந்த தோனி : முக்கிய அப்டேட் கொடுத்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஐபிஎல்
    மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் ராஜஸ்தான் ராயல்ஸ்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் விதிமீறல் : அஸ்வினுக்கு 25 சதவீதம் அபராதம் விதித்தது பிசிசிஐ ஐபிஎல்

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சம் : ஒரே போட்டிக்கு 2.2 கோடி பார்வையாளர்களை பெற்ற ஜியோ சினிமா ஐபிஎல்
    ஐபிஎல்லில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் : லசித் மலிங்காவின் சாதனையை முறியடித்த ககிசோ ரபாடா ஐபிஎல்
    சூதாட்ட நிறுவனத்துடன் தொடர்பு : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கு சிக்கல் கிரிக்கெட்
    ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் கேப் வைத்துள்ளவர்கள் தற்போதைய நிலவரம் ஐபிஎல்

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025