NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு; அமலாக்கத்துறை முன் ஆஜராக முன்னாள் இந்திய கேப்டனுக்கு மீண்டும் சம்மன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு; அமலாக்கத்துறை முன் ஆஜராக முன்னாள் இந்திய கேப்டனுக்கு மீண்டும் சம்மன்
    முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

    கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு; அமலாக்கத்துறை முன் ஆஜராக முன்னாள் இந்திய கேப்டனுக்கு மீண்டும் சம்மன்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 03, 2024
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பான பணமோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் அரசியல்வாதியுமான முகமது அசாருதீனுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    61 வயதான முன்னாள் எம்பி முகமது அசாருதீன் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

    அமலாக்கத்துறை முன் ஆஜராகி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், முகமது அசாருதீன் அமலாக்கத்துறையிடம் ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    வழக்கு

    வழக்கு தொடர்பான விபரங்கள்

    முகமது அசாருதீனுக்கு எதிரான வழக்கு, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பானது.

    அமலாக்கத்துறை நவம்பர் 2023இல் இதுதொடர்பாக சோதனைகளை நடத்தியது. தகவலறிந்த வட்டாரங்களின்படி, அசாருதீன் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த காலத்தில் அவர் வகித்த பங்கு அமலாக்கத்துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    பணமோசடி வழக்கு, கிரிக்கெட் சங்க நிதி ரூ.20 கோடியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த மூன்று எஃப்ஐஆர்கள் மற்றும் குற்றப்பத்திரிகைகளில் இருந்து அமலாக்கத்துறை தனது நடவடிக்கையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் முகமது அசாருதீன் காலத்தில் இருந்த செயலாளர், துணைத் தலைவர் உள்ளிட்ட பலருக்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமலாக்கத்துறை
    அமலாக்க இயக்குநரகம்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    அமலாக்கத்துறை

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை ஹீரோ
    மூளை நரம்பில் ரத்த அடைப்புகள்; செந்தில் பாலாஜிக்கு தொடரும் சிகிச்சை செந்தில் பாலாஜி
    சென்னை நகை கடைகளில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை  சென்னை
    அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பாக பைஜூஸூக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை? வணிகம்

    அமலாக்க இயக்குநரகம்

    மஹாதேவ் பெட்டிங் செயலி, சத்தீஸ்கர் முதல்வருக்கு ₹508 கோடி அளித்துள்ளது கண்டுபிடிப்பு: அமலாக்கத்துறை சத்தீஸ்கர்
    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம் இந்தியா
    ₹100 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி நகைக்கடை-அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம் திருச்சி
    ₹100 கோடி பொன்சி மோசடி வழக்கில், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் பிரகாஷ் ராஜ்

    கிரிக்கெட்

    அதிக ரன்கள்; 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    INDvsBAN முதல் டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் வங்கதேச வீரர்களை தெறிக்கவிட்ட ஆகாஷ் தீப்; வைரலாகும் காணொளி டெஸ்ட் கிரிக்கெட்
    INDvsBAN முதல் டெஸ்ட்: பும்ராவின் அபார பந்துவீச்சால் 149 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்
    முதல் 10 டெஸ்டில் அதிக ரன்கள்; டான் பிராட்மேன் இடம்பெற்றுள்ள டாப் 5 பட்டியலில் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

    கிரிக்கெட் செய்திகள்

    டிஆர்எஸ் வேண்டாம் என முடிவெடுத்த விராட் கோலி; ஆச்சரியமடைந்த ரோஹித் ஷர்மா விராட் கோலி
    நவீன டெஸ்ட் கிரிக்கெட்டின் அரிய நிகழ்வு; 16 வருடங்களில் முதல்முறையாக ஓய்வு நாள்; எதற்குத் தெரியுமா? டெஸ்ட் கிரிக்கெட்
    INDvsBAN முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாவது சதத்தை பதிவு செய்தார் ரிஷப் பண்ட் ரிஷப் பண்ட்
    INDvsBAN: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷுப்மன் கில் ஷுப்மன் கில்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025