நிச்சயதார்த்தம் முடிந்து 6 மாதத்தில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா - நடிகை ஆக்ரிதி அகர்வால் பிரிவு
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா மற்றும் பிரபல நடிகை ஆக்ரிதி அகர்வால் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், தங்களது நிச்சயதார்த்தம் முடிந்து 6 மாதங்களே ஆன சூழலில், இருவரும் பரஸ்பரம் பிரிவதாக நடிகை ஆக்ரிதி அகர்வால் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஆக்ரிதி அகர்வால் உருக்கம்
ஆக்ரிதி அகர்வால் உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு
தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பிரிவு குறித்துப் பதிவிட்டுள்ள ஆக்ரிதி அகர்வால், "கனத்த இதயத்துடன் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்கிறேன்.
எதிர்கால இலக்குகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகள் மாறுபடுவதால், நானும் எனது நிச்சயக்கப்பட்ட கணவரும் தனித்தனி பாதைகளில் செல்ல முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பும் அக்கறையும் வைத்துள்ளோம்.
இருப்பினும் எங்கள் இருவரின் பாதைகளும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேண்டுகோள்
தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள்
மேலும் அந்தப் பதிவில், "எங்களது எதிர்கால வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
இந்த கடினமான தருணத்தில் எங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.
எங்களது பிரிவு குறித்து தேவையற்ற வதந்திகளையும் ஊகங்களையும் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்." என்று ஆக்ரிதி அகர்வால் பதிவிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி நாளில் பகிர்ந்த உருக்கமான பதிவு
முன்னதாக புதன்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின் போது படம் ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார்.
அதில், "பாப்பா, இந்த விசர்ஜனத்தின் போது எனது அனைத்து வேதனைகளையும், துன்பங்களையும், பிரச்சினைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்.
அடுத்த ஆண்டு என்னை நீங்கள் பார்க்கும்போது, தனக்கான முன்னுரிமையை அளித்து, உறுதியான மனதுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு புதிய ஆக்ரிதியைப் பார்ப்பீர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.