'இது தான் எனது கடைசி போட்டி' : ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு!
ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு முன்னதாக அம்பதி ராயுடு தனது முடிவை ட்விட்டரில் அறிவித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு சிறந்த அணிகளுக்காக 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளேஆப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள். இன்று இரவு 6வது. இது மிகவும் சிறப்பான பயணம். இன்றிரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளேன். அனைவருக்கும் நன்றி. நான் திரும்பவும் விளையாட மாட்டேன்." என தெரிவித்துள்ளார்.