NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்
    சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம்

    சென்னையில் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 31, 2024
    07:49 pm

    செய்தி முன்னோட்டம்

    பல்வேறு கட்ட இழுபறிகளுக்கு பிறகு சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது. அமைச்சர் உதயநிதி போட்டியைத் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக, போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடனப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரவுண்டு 2 போட்டிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்பட்டது.

    இது போட்டியைக் காண வந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில், முன்னதாக ஃபார்முலா 4 கார் பந்தயத்தைத் தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சில நிபந்தனைகளை விதித்தது.

    அதில், கார் ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பெடரேஷன் ஆஃப் இண்டர்நேஷனல் ஆட்டோமொபைல் (எஃப்ஐஏ) அமைப்பிடம் சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் சான்று பெற வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டிருந்தது.

    எஃப்ஐஏ சான்று

    சான்றிதழ் வழங்கியது எஃப்ஐஏ

    இந்நிலையில், எஃப்ஐஏ சான்றித பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் போட்டியை நடத்தும் ரேஸிங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் இரவு 8 மணி வரை அவகாசம் வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து எஃப்ஐஏ ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதற்கான அனுமதியை மாலை வழங்கியது.

    இதையடுத்து சென்னை தீவுத் திடலில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு 7 மணிக்கு போட்டியைத் தொடங்கி வைத்தார்.

    7 மணிக்கு தொடங்கிய போட்டிகள் இரவு 10.45 மணி வரை நடக்க உள்ளது. இதையடுத்து ரசிகர்களின் ஆரவாரத்தோடு கார் பந்தயம் நடந்து வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    போட்டியைத் தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

    #BREAKING | தெற்காசியாவிலேயே முதல்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் தொடங்கியது!#SunNews | #FormulaRacing | #Formula4Chennai pic.twitter.com/aeJuFZI0yZ

    — Sun News (@sunnewstamil) August 31, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஃபார்முலா 4
    சென்னை
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    ஃபார்முலா 4

    ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்கப் போறீங்களா? சென்னை மெட்ரோவில் இலவச பயணம் சென்னை

    சென்னை

    தமிழகத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை மழை
    சென்ற ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்: மீண்டும் ஆக. 31-ல் சென்னையில் தொடக்கம் கார்
    ஆபரண தங்கத்தின் விலை ஒரே வாரத்தில் ரூ.280 உயர்ந்தது தங்கம் வெள்ளி விலை
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது தங்கம் வெள்ளி விலை

    உதயநிதி ஸ்டாலின்

    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின்
    'ஒரு சின்னப்பிள்ளையை குறிவைக்கிறார்கள்': உதயநிதிக்கு கமல்ஹாசன் ஆதரவு திமுக
     உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி - தொகையை உயர்த்திய அயோத்தி சாமியார் உதயநிதி ஸ்டாலின்
    'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு  பாஜக
    LCU -வில் லியோ! உதயநிதி டீவீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு லியோ
    'லியோ' திரைப்படம் நாளை ரிலீஸ் - பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் விஜய்
    11 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025