வினேஷ் போகட்டின் மேல்முறையீடு மனு தள்ளுபடி; அடுத்து என்ன செய்யப்போகிறது IOA?
செய்தி முன்னோட்டம்
வெள்ளிப் பதக்கத்திற்காக வினேஷ் போகட்டின் மேல்முறையீட்டை விளையாட்டு நடுவர் நீதிமன்றம் நிராகரித்ததால், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது 7வது பதக்கத்தை வெல்லாது.
CAS அதன் செயல்பாட்டு தீர்ப்பை ஆகஸ்ட் 14, நேற்று இரவு வெளியிட்டது.
இந்த முடிவுக்குப் பிறகு, வினேஷ் வெள்ளி வெல்ல முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், அவரது பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏமாற்றத்துடன் பதிலளித்த இந்திய ஒலிம்பிக் சங்கம், வினேஷ் விவகாரத்தில் சட்டப்பூர்வ உதவியை நாடப்போவதாகக் கூறியது.
முன்னதாக CAS வினேஷ் விவகாரத்தில் ஆகஸ்ட் 13 செவ்வாய்கிழமை மூன்றாவது முறையாக தங்கள் தீர்ப்பை தாமதப்படுத்தியது.
இந்த தாமதம் வினேஷிற்கு சாதமாக மாறக்கூடும் என பலரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பின்னணி
100 கிராம் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ்
மல்யுத்த வீரரான வினேஷ் போகட், பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டார்.
ஆனால், அவரது இறுதிப் போட்டி அன்று எடை வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருந்தது.
அதனால் அவர் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து வினேஷும், இந்தியா ஒலிம்பிக் சம்மேளனமும் நடுவன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
IOA தலைவர் PT உஷா, CAS இல் உள்ள ஒரே நடுவரின் முடிவு குறித்து தனது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!#SunNews | #VineshPhogat | #Wrestling pic.twitter.com/KPLg58IV7C
— Sun News (@sunnewstamil) August 14, 2024
PT உஷா
"பெண் விளையாட்டு வீரர்களின் உடலியலை கணக்கில் கொள்ளாத விதிமுறைகள்": PT உஷா
இந்த உத்தரவு வந்த பின்னர் PT உஷா அறிக்கை வெளியிட்டார். அதில்,"இரண்டாவது நாளில் இதுபோன்ற எடை மீறலுக்காக ஒரு தடகள வீரரின் மொத்த தகுதி நீக்கம் ஆழமான ஆய்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று IOA உறுதியாக நம்புகிறது. எங்கள் சட்டப் பிரதிநிதிகள் தனி நடுவர் முன் தங்கள் சமர்ப்பிப்புகளில் இதை முறையாகக் கொண்டு வந்தனர். வினேஷ் சம்பந்தப்பட்ட விஷயம் ஹைலைட் செய்கிறது".
"விளையாட்டு வீரர்கள், குறிப்பாக பெண் விளையாட்டு வீரர்கள், உடலியல் மற்றும் உளவியல் அழுத்தங்களைக் கணக்கில் கொள்ளத் தவறிய கடுமையான மற்றும் மனிதாபிமானமற்ற விதிமுறைகள், விளையாட்டு வீரர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் மிகவும் சமமான மற்றும் நியாயமான தரநிலைகளின் அவசியத்தை அப்பட்டமாக நினைவூட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.