
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்களை பிரதிபலிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் 2025 ஆசிய கோப்பை மற்றும் பிற அனைத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிகழ்வுகளிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முடிவு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணிகள் ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதும் இதில் அடங்கும்.
பிசிசிஐயின் நிலைப்பாடு, தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் பாகிஸ்தானின் மத்திய அமைச்சர் மொஹ்சின் நக்விக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனினும், பிசிசிஐ நிர்வாகிகள் தேசிய உணர்வை விலகுவதற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடுகின்றனர்.
ஹைபிரிட் போட்டிகள்
ஹைபிரிட் போட்டிகளும் இனி கிடையாது
"பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரைத் தலைவராகக் கொண்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட முடியாது.
அதுதான் நாட்டின் உணர்வு" என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கத்துடன் பிசிசிஐ நெருக்கமான ஆலோசனையில் உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா இல்லாமல் ஆசியக் கோப்பையை நடத்துவது ஸ்பான்சர்ஷிப் மற்றும் பார்வையாளர்களின் அடிப்படையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு சவால்களை ஏற்படுத்தும் என்று வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.
முன்னதாக, 2023 ஆசிய கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் முறையில் நடத்தப்பட்டாலும், இனி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் அப்படியும் விளையாடுவதில்லை என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.