NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ
    அடுத்த செய்திக் கட்டுரை
    50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ
    50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ

    50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 09, 2023
    06:41 pm

    செய்தி முன்னோட்டம்

    2023-ம் ஆண்டிற்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது பிசிசிஐ. அந்த அட்டவணையில் தற்போது சில மாற்றங்களைச் செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

    இந்தியாவின் முக்கியமான போட்டியாகக் கருதப்படும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியானது முதலில் அக்டோபர் 15-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது.

    குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்தி மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி, நடைபெறும் அன்று இந்தியாவில் நவராத்திரி பூஜையும் தொடங்குகிறது. எனவே, இந்தப் போட்டியை அதற்கு முந்தைய நாளான அக்டோபர் 14-ம் தேதி மாற்றி வைத்திருக்கிறது பிசிசிஐ. இந்த மாற்றத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஒப்புக் கொண்டிருக்கிறது.

    கிரிக்கெட்

    மாற்றம் செய்யப்பட்ட போட்டிகள்: 

    மேற்கூறிய இந்தியா-பாகிஸ்தான் போட்டி மட்டுமின்றி, மேலும் 8 போட்டிகளில் மாற்றம் செய்திருக்கிறது பிசிசிஐ. நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் போட்டியானது நவம்பர் 11-ல் இருந்து 12-க்கு மாற்றப்பட்டிருக்கிறது.

    பாகிஸ்தான்-இலங்கை இடையிலான போட்டி, அக்டோபர் 12-ல் இருந்து 10-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி அக்டோபர் 12-க்கு மாற்றப்பட்டிருக்கிறது.

    சென்னையில் அக்டோபர் 14-ம் தேதி நடைபெறவிருக்கும் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் இடையிலான போட்டி பகலிரவுப் போட்டியாக நடைபெறவிருக்கிறது.

    நவம்பர் 12-ம் தேதி நடைபெறவிருந்த, ஆஸ்திரேலியா-பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து-பாகிஸ்தான் ஆகிய இரண்டு போட்டிகள் நவம்பர் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.

    இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பையிலும், இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடைபெறவிருக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    உலக கோப்பை
    இந்தியா
    பிசிசிஐ

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கிரிக்கெட்

    தொடர்ந்து 13 வது முறையாக, WI க்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா  இந்திய கிரிக்கெட் அணி
    மேற்கிந்தியத் தீவுகளின் ஏற்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கும் ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணி
    ODI உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம் உறுதி; பாக். கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் ஒருநாள் உலகக்கோப்பை
    'பும்ரா இல்லனா தோல்வி நிச்சயம்' : முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் வார்னிங் கிரிக்கெட் செய்திகள்

    உலக கோப்பை

    நியூசிலாந்திடம் தோல்வி! ஹாக்கி உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியது இந்தியா! ஹாக்கி போட்டி
    யு-19 மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! U19 உலகக்கோப்பை
    40 ஆண்டுகளுக்கு பிறகு பிபா கூடைப்பந்து உலககோப்பைக்கு தகுதி பெறாத அர்ஜென்டினா விளையாட்டு
    மகளிர் ஸ்னூக்கர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா விளையாட்டு

    இந்தியா

    இந்தியாவில் பயில வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய வலைதளம் அறிமுகம்  மத்திய அரசு
    2031-ல் 6.7 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக மாறும் இந்தியா! வணிகம்
    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி கொரோனா
    உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார் ஜோதி யர்ராஜி தடகள போட்டி

    பிசிசிஐ

    இந்திய அணிக்கு புதிய பயிற்சி கிட்டை வழங்கியது பிசிசிஐ! விரைவில் புதிய ஜெர்சி அறிமுகம்! இந்திய அணி
    ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு! ஆசிய கோப்பை
    தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு! கிரிக்கெட்
    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன் ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025