NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தான் செல்ல முடியாது; மீண்டும் உறுதி செய்தது பிசிசிஐ
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தான் செல்ல முடியாது; மீண்டும் உறுதி செய்தது பிசிசிஐ
    சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தான் செல்ல முடியாது என்பதை மீண்டும் உறுதி செய்தது பிசிசிஐ

    சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தான் செல்ல முடியாது; மீண்டும் உறுதி செய்தது பிசிசிஐ

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 08, 2024
    05:55 pm

    செய்தி முன்னோட்டம்

    8 வருட இடைவெளிக்குப் பிறகு புத்துயிர் பெற்றுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தியின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிபி) தங்கள் முடிவைத் தெரிவித்து விட்டது.

    பிசிசிஐ தங்களின் முடிவுக்கான காரணமாக, பாதுகாப்புக் கவலைகளை மேற்கோள் காட்டியது மற்றும் அறிக்கையின்படி துபாயில் தங்கள் அனைத்து ஆட்டங்களையும் விளையாட விருப்பம் தெரிவித்தது.

    "எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் அவர்களுக்கு கடிதம் எழுதி எங்கள் விளையாட்டுகளை துபாய்க்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டோம்." என்று பெயர் தெரியாத நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

    ஹைபிரிட் மாடல்

    ஹைபிரிட் மாடல் முறையில் போட்டி நடக்குமா? 

    கடைசியாக பாகிஸ்தான் நடத்திய மல்டி டோர்னமெண்ட் போட்டியானது 2023ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையாகும். இது ஹைப்ரிட் மாடலில் நடத்தப்பட்டது.

    இதில், இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டி உட்பட தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடியது.

    எவ்வாறாயினும், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் இந்தியா பங்கேற்ற பிறகு, கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா என்ற பேச்சு மீண்டும் எழுந்தது.

    ஒவ்வொரு ஆட்டத்திற்குப் பிறகும் தங்கள் அணி இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற யோசனையுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயை அணுகியதாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.

    இருப்பினும், பிசிசிஐயும் இந்த விருப்பத்தை நிராகரித்துவிட்டதாகவும், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது.

    ஐசிசி

    பிசிசிஐ முடிவில் ஐசிசி தலையிடுமா?

    பாகிஸ்தானுக்குச் செல்ல இந்தியா மறுத்ததில் ஐசிசி தலையிட வாய்ப்பில்லை. ஏனெனில் அதன் அரசாங்கக் கொள்கைக்கு எதிராக எந்த வாரியத்தையும் கட்டாயப்படுத்த முடியாது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ள தற்காலிக அட்டவணையின்படி, பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி லாகூரில் நடைபெற உள்ளது.

    இந்த தொடர் பிப்ரவரி 19 அன்று தொடங்கி இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்காலிக அட்டவணையின்படி, பாதுகாப்பு மற்றும் தளவாட காரணங்களுக்காக இந்தியாவின் அனைத்து போட்டிகளும் லாகூரில் வைக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாம்பியன்ஸ் டிராபி
    பிசிசிஐ
    ஐசிசி
    இந்திய கிரிக்கெட் அணி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சாம்பியன்ஸ் டிராபி

    ICC Champions Trophy 2025 Qualified Teams : சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள் ஒருநாள் கிரிக்கெட்
    Sports Round Up : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பிடித்த வீரேந்திர சேவாக்; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட் செய்திகள்
    சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு நாட்டுக்கு மாற்றம்? பாகிஸ்தானை நக்கல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    பிசிசிஐ

    இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு சவுரவ் கங்குலி
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்  விளையாட்டு
    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ அறிவிப்பு கிரிக்கெட்

    ஐசிசி

    ODI World Cup Prize Money : இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா! ஒருநாள் உலகக்கோப்பை
    INDvsAUS Final : இறுதிப்போட்டியை நேரில் காண முன்னாள் வெற்றி நாயகர்கள் அனைவருக்கும் அழைப்பு ஒருநாள் உலகக்கோப்பை
    ODI World Cup Player of the Tournament : 1992 முதல் 2019 வரை தொடர் நாயகன் விருது வென்றவர்களின் பட்டியல் ஒருநாள் உலகக்கோப்பை
    2023 உலகக் கோப்பை: ஐசிசியின் டீம் ஆஃப் டோர்னமெண்ட் அணியில் ஆறு இந்தியர்கள் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை

    இந்திய கிரிக்கெட் அணி

    INDvsNZ முதல் டெஸ்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்; வீரேந்திர சேவாக்கின் ரெக்கார்டை முறியடித்தார் டிம் சவுத்தி வீரேந்திர சேவாக்
    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஒரு ஆண்டில் 100 சிக்சர்கள் அடித்து இந்தியா சாதனை நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய நான்காவது இந்தியர்; விராட் கோலி சாதனை விராட் கோலி
    டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் சாதனை; கபில்தேவின் ரெக்கார்டை முறியடித்தா ரிஷப் பண்ட் ரிஷப் பண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025