NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    May 09, 2025
    12:23 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா vs பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றங்கள் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் காலவரையறையின்றி நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

    முன்னதாக, தரம்சாலாவில் வியாழக்கிழமை (மே 8) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது.

    மேலும், தொடரை ரத்து செய்வது குறித்து ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை கூட்டப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என ஐபிஎல் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியிருந்தார்.

    "நாடு போரில் இருக்கும்போது கிரிக்கெட் தொடர்வது நல்லதல்ல" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக குறிப்பிட்டு, பிடிஐ செய்தியை உறுதிப்படுத்தி உள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    IPL suspended indefinitely due to India-Pakistan military conflict: BCCI official

    — Press Trust of India (@PTI_News) May 9, 2025

    வீரர்கள் வெளியேற்றம்

    அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் வீரர்கள் வெளியேற்றம்

    முன்னதாக, மேற்கூறிய இடைநிறுத்தப்பட்ட போட்டியின் போது, ​​பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள் தங்கள் கிரிக்கெட் உபகரணங்களுடன் பேருந்துகளில் ஏறுவதைக் காண முடிந்தது.

    "பதான்கோட்டில் அருகிலுள்ள தாக்குதல்கள் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஹோட்டலுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம்." என்று ஒரு வீரர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

    வியாழக்கிழமை போட்டிக்குப் பிறகு தர்மசாலாவிலிருந்து வீரர்களை வெளியேற்ற பிசிசிஐ சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

    குறிப்பாக, அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மின்சாரக் கோளாறு காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்

    பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றம்

    மற்றொரு செய்தியில், பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 சீசனின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) க்கு மாற்றப்பட்டுள்ளன.

    வியாழக்கிழமை, ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறவிருந்த கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி இடையேயான ஆட்டம், மைதான வளாகத்திற்குள் ஒரு ட்ரோன் விழுந்ததைத் தொடர்ந்து அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் திட்டமிடப்பட்டது.

    அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    ஐபிஎல் 2025

    ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஎஸ்ஆர்எச்: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல்
    400 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய நான்காவது இந்தியர்; எம்எஸ் தோனி புதிய சாதனை எம்எஸ் தோனி
    என்னதான் பிரச்சினை? ஐபிஎல் 2025 பவர்பிளேவில் தொடர்ந்து தடுமாறும் சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில் வரலாற்று மைல்கல்லை எட்டுவாரா விராட் கோலி? விராட் கோலி

    ஐபிஎல்

    டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; ஒரு மைதானத்தில் 3,500 ரன்கள் குவித்து விராட் கோலி இமாலய சாதனை விராட் கோலி
    ஐபிஎல் 2025 எம்ஐvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் வேகமாக 4,000 ரன்களை எட்டிய இந்தியர்; சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ் சூர்யகுமார் யாதவ்
    ஐபிஎல் 2025 ஆர்சிபிvsடிசி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025

    டி20 கிரிக்கெட்

    ஐபிஎல்லில் அதிக 50+ ஸ்கோர்கள்; டேவிட் வார்னரை விஞ்சி விராட் கோலி புதிய சாதனை விராட் கோலி
    ஐபிஎல் 2025 எம்vsசிஎஸ்கே : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்; சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025 எம்ஐvsசிஎஸ்கே: அறிமுக வீரராக களமிறங்கிய 17 வயது ஆயுஷ் மத்ரேவின் புள்ளி விபரங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்
    கோலியின் அரைசதம் மூலம் பஞ்சாப் கிங்ஸை பந்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்: சவுரவ் கங்குலி சவுரவ் கங்குலி
    ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஜிடி: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் அறிமுகமான 10வது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற கரீம் ஜனத் குஜராத் டைட்டன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025