
8 ஆண்டுகளில் முதல்முறை; ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாமிற்கு கல்தா
செய்தி முன்னோட்டம்
துபாய் மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் ஆசிய கோப்பை 2025க்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சல்மான் அலி ஆகா தலைமையிலான இந்த அணி, ஆசிய கோப்பையில் செப்டம்பர் 12ஆம் தேதி ஓமானுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 14ஆம் தேதி இந்தியாவுடன் மோதும், செப்டம்பர் 17ஆம் தேதி குழு நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொள்ளும். இந்நிலையில், பாகிஸ்தானின் அணியில் முக்கிய வீரராக இருக்கும் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் அணியில் சேர்க்கப்படாததால் இந்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. எட்டு ஆண்டுகளில் பாபர் அசாம் ஆசிய கோப்பையை தவறவிடுவது இதுவே முதல் முறையாகும்.
இளம் வீரர்கள்
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
பாபர் அசாமுடன், விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வானும் ஆசிய கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை. இது தேர்வாளர்கள் இளம் திறமைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதை வெளிப்படுத்துகிறது. ஆசிய கோப்பைக்கு முன், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலும் இதே அணி பங்கேற்க உள்ளது. பாகிஸ்தான் அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, ஷாஹீன் ஷா அப்ரிடி, சுஃப்யான் மோகிம்.