NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது ஆஸ்திரேலியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது ஆஸ்திரேலியா
    2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது ஆஸ்திரேலியா

    2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது ஆஸ்திரேலியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 18, 2023
    12:19 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் செவ்வாயன்று (ஜூலை 18), 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான திட்டமிடப்பட்ட செலவு மிகவும் அதிகரித்துள்ளதால், போட்டியை நடத்துவதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    டேனியல் ஆண்ட்ரூஸ், கடந்த ஆண்டு தனது அரசாங்கம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அடுத்த சீசனை நடத்த ஒப்புக்கொண்டாலும், எந்த விலை கொடுத்தும் அதை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, கடந்த ஆண்டு இந்த போட்டியை நடத்த இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,000 கோடி தேவை என மதிப்பிடப்பட்ட நிலையில், தற்போது ரூ.40,000 கோடி வரை செலவாகும் என தெரிய வந்ததால், இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

    commenwealth games federation reaction

    காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை

    போட்டியை நடத்தும் முடிவிலிருந்து விலகுவதாக செய்தியாளர்களிடம் அறிவித்த டேனியல் ஆண்ட்ரூஸ், ஏற்கனவே மதிப்பிடப்பட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகம் செலவாகும் என தெரியவந்துள்ள நிலையில், இதற்காக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கான நிதியில் கைவைக்க முடியாது என்பதால் விலகும் முடிவை எடுத்தாக தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, 2026 விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 17-29 தேதிகளில் விக்டோரியாவின் ஜிலாங், பென்டிகோ, பல்லாரட், கிப்ஸ்லேண்ட் மற்றும் ஷெப்பர்டன் ஆகிய பிராந்திய மையங்களில் திட்டமிடப்பட்டது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முடிவு விளையாட்டு வீரர்கள் மற்றும் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    இதனிடையே, போட்டியை நடத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா
    விளையாட்டு வீரர்கள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா

    விளையாட்டு வீரர்கள்

    மல்யுத்த வீரர்கள் விசாரணை முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும்:  மத்திய அமைச்சர்  இந்தியா
     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025