Page Loader
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; வேற லெவல் சாதனை படைத்த டெல்லி கேப்பிடல்ஸ்
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த டெல்லி கேப்பிடல்ஸ்

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; வேற லெவல் சாதனை படைத்த டெல்லி கேப்பிடல்ஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 25, 2025
08:04 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பரபரப்பான சேசிங்களில் ஒன்றாக விசாகப்பட்டினத்தில் நடந்த ஐபிஎல் 2025 தொடரின் நான்காவது ஆட்டம் அமைந்துள்ளது. திங்கட்கிழமை (மார்ச் 24) அன்று நடைபெற்ற இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணி வெற்றி பெற்றது. 209 ரன்கள் இலக்கைத் துரத்திய டிசி அணி 65-5 என்ற நிலையில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து போராடினாலும், அசுதோஷ் சர்மாவின் அசாதாரண ஆட்டம் ஆட்டத்தையே மாற்றியது. ஏழாவது இடத்தில் களமிறங்கிய அசுதோஷ், ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து, டிசி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து வரலாறு படைத்தார்.

அசுதோஷ் சர்மா

அசுதோஷ் சர்மா சாதனை

வெற்றிகரமான ரன்-சேசிங்கில் ஏழாவது அல்லது அதற்குக் கீழே இருந்து ஒரு இந்தியர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் என்ற யூசுப் பதானின் சாதனையை இதன் மூலம் அசுதோஷ் சர்மா முறியடித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட பிறகு ஒரு வீரர் அடித்த இரண்டாவது அதிகபட்ச ரன் இதுவாகும். முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் டுவைன் பிராவோ 68 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ் சாதனை

டெல்லி கேப்பிடல்ஸ் அவர்களின் ஏழாவது மற்றும் கீழ் வரிசை பேட்டர்களிடமிருந்து 113 ரன்களை எடுத்தது சாதனையாக மாறியுள்ளது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி ஐந்தாவது விக்கெட்டை இழந்த பிறகு வெற்றிகரமான சேஸிங்கில் 100 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும். மேலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு 204 ரன்கள் எடுத்து புதிய அளவுகோல்களை அமைத்தது. இதுவும் ஐபிஎல் போட்டியில் இதுவரை இல்லாத அதிகபட்சமாகும். 200+ ரன் சேஸிங்கில் அவர்களின் ஒரு விக்கெட் வெற்றி ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற இரண்டாவது நிகழ்வாக இது அமைந்துள்ளது.