NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது
    இந்தியாவில் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

    இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 25, 2022
    03:23 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும், இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளதாக, வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த புதன்கிழமை, வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, இது அக்டோபரில் அவர்கள் தடை செய்த கணக்குகளின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகம்.

    நவம்பர் மாதம், தடைசெய்யப்பட்ட கணக்குகளில், 9.9 லட்சம் கணக்குகள் முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டவை ஆகும்.

    அக்டோபரில், வாட்ஸ்அப் நாட்டில் 23.24 லட்சம் கணக்குகளை தடை செய்தது, இதில் 8.11 லட்சம் கணக்குகள், புகார்கள் வரும் முன்னரே, முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டன.

    "தடை செய்யப்பட்டவை அனைத்தும், இந்தியக் கணக்கு என, +91 தொலைபேசி எண் மூலம் உறுதி செய்யப்பட்டது" என்று, தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க

    இந்தியாவில் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

    கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த, IT விதிகளின் படி, பெரிய டிஜிட்டல் தளங்கள் யாவும், ஒவ்வொரு மாதமும் அறிக்கைகளை வெளியிட வேண்டும். அதில், பெறப்பட்ட புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் குறிப்பிடவேண்டும்.

    சிலகாலம் முன்பு வரை, சமூக ஊடகங்களில், பரிமாறப்பட்ட தவறான தகவல், போலி செய்திகள் மற்றும், வெறுப்பு பேச்சு ஆகியவற்றுக்கு பலத்த கண்டனங்கள் வந்தன. அதை தடுக்க, டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் தன்னிச்சையாக பல கட்டுப்பாடுகளை விதித்தது.

    சில நேரங்களில், தானாகவே, சில பயனர்களை 'டி-பிளாட்ஃபார்மிங்' செய்தன. இதனால் கடும் எதிர்ப்பு நிலவியது.

    அதை நிவர்த்தி செய்யும் பொருட்டே, கடந்த வாரம், மத்திய அமைச்சகம், புகார் மேல்முறையீட்டு முறையை அமைப்பதற்கான விதிகளை அறிவித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயனர் பாதுகாப்பு
    ஆண்ட்ராய்டு

    சமீபத்திய

    ராகுல் காந்தியின் டெல்லி பல்கலைக்கழக வருகை சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது- என்ன காரணம்? ராகுல் காந்தி
    அடிக்கடி அலாரத்தை ஸ்னூஸ் செய்துவிட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அப்படி செய்யாதீங்க தூக்கம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல் உலக வங்கி
    ஆன்லைன் பேட்டிங் செயலிகளை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு; மத்திய அரசுக்கு நோட்டீஸ் ஆன்லைன் கேமிங்

    பயனர் பாதுகாப்பு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் ட்விட்டர்
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் ட்விட்டர்
    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் 5G

    ஆண்ட்ராய்டு

    ஆண்ட்ராய்டு 13 - இப்போது பிளைட் மோடில் கூட வைஃபையை இயக்கலாம் ஆண்ட்ராய்டு 13
    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான ஆப்பிள் டிவி: விரைவில் எதிர்பார்க்கலாம் ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025