NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இணையத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிட்ட மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இணையத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிட்ட மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா
    AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இணையத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிட்ட மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா

    AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை இணையத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிட்ட மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 20, 2023
    01:39 pm

    செய்தி முன்னோட்டம்

    1990-களில் ஏற்பட்ட இணைய வளர்ச்சியுடன் தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியை ஒப்பிட்டிருக்கிறார் மைக்ரோசஃப்டின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா.

    சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யா நாதெல்லா, அந்த நிகழ்வில் தன்னுடைய இந்தக் கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

    1995-க்குப் பிறகு இந்த உலகத்தை இணையத்தின் வளர்ச்சி எந்தளவு மாற்றியதோ, அதோ போல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் இந்த உலகைப் புரட்டிப்போடும் எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    மேலும், 1995 டாட் காம் காலக்கட்டத்தின் போது, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கடிதத்தில் அவர் பகிர்ந்து கொண்ட ஒரு கருத்தையும் தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் ஒப்பிட்டிருக்கிறார் அவர்.

    செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களில் மைக்ரோசாஃப்டின் முதலீடு: 

    கடந்த ஆண்டு நவம்பரில் உலகளவில், தங்களுடைய புதிய செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான சாட்ஜிபிடியை வெளியிட்டது அமெரிக்காவின் ஓபன்ஏஐ நிறுவனம்.

    அதனைத் தொடர்ந்து, கடந்த ஒன்பது மாதங்களில் பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தத் தொடங்கியதுடன், தங்களுடைய AI கருவிகளையும் வெளியிட்டிருக்கின்றன.

    மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், AI தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறது. முக்கியமாக, ஓபன்ஏஐ-யின் GPT LLM மற்றும் அதனைப் பயன்படுத்தும் சாட்ஜிபிடி ஆகிய இரண்டிலும் 13 பில்லியன் டாலர்களுக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

    அதுமட்டுமின்றி, ஓபன்ஏஐ-யின் மேம்படுத்தப்பட்ட LLM ஆன GPT-4யே மைக்ரோசாஃப்டின் பிங் AIயும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மைக்ரோசாஃப்ட்
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்
    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்

    மைக்ரோசாஃப்ட்

    மைக்ரோசாஃப்டின் அறிவிப்பு.. வழக்கு தொடர்வதாக எச்சரித்த எலான் மஸ்க்.. என்ன பிரச்சினை?  எலான் மஸ்க்
    மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!  வீடியோ கேம்
    AI போட்டியில் முன்னேறும் மைக்ரோசாஃப்ட்.. என்ன செய்கிறது கூகுள்?  செயற்கை நுண்ணறிவு
    AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்! செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    கோடி சம்பளத்துடன் வேலைவாய்ப்பை அளிக்கும் 'Prompt Engineering' பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சாட்ஜிபிடி
    என்னென்ன மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது கூகுள் தேடுபொறி? கூகுள்
    AI தொழில்நுட்பங்களுக்கான புதிய சட்டம்.. என்ன செய்கிறது அமெரிக்கா? அமெரிக்கா
    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்! சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025