NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்?
    நிலவில் துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்

    துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 03, 2023
    11:28 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் நாள், நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3.

    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்துருவப் பகுதியின் மேற்பரப்பில் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தன சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டிருந்த விக்ரம் லேண்டரும், பிரஞ்யான் ரோவரும்.

    நிலவின் ஒரு நாள் கணக்கிற்கு (பூமியின் நாட்கள் கணக்கில் 14 நாட்கள்) மேற்கூறிய இரண்டு உபகரணங்களும் செயல்படும் வகையிலேயே சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    தற்போது நிலவின் ஒரு நாள் முடிவிற்கு வரவிருக்கும் நிலையில், தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த பணிகளைை முடித்து பிரஞ்யான் ரோவர் துயில் கொள்ளவிருப்பதாகத் எக்ஸில் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ. மேலும், இதுவரை பிரஞ்யான் சேகரித்த தகவல்களானது விக்ரம் லேண்டர் மூலம் பூமிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.

    பிரஞ்யான் ரோவர்

    ஏன் துயில் நிலைக்குச் செல்லவிருக்கிறது பிரஞ்யான் ரோவர்? 

    நிலவின் தென்துருவப் பகுதியில் பகல் நேரத்தில் நிலவும் வெப்பத்தை விட இரவு நேரம் மிகக் குறைவாகவே வெப்பம் இருக்கும். -230 டிகிரி செல்சியஸூக்கும் கீழே கூட நிலவின் இரவு நேரக் குளிர் இருக்குமாம்.

    சூரிய ஒளியின் உதவியுடன் இயக்கும் லேண்டர் மற்றும் ரோவரால் சூரிய ஒளி இல்லாமல் இயங்க முடியாது. மேலும், இந்தக் கடும் குளிரில் லேண்டர் மற்றும் ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் பழுதடைவற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

    எனவே தான் ஒரே ஒரு பகல் மட்டும் செயல்படும் வண்ணம் சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டது. தற்போது ரோவரின் பேட்டரிக்கள் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்டன், அதன் பிற அறிவியல் கருவிகள் அணைக்கப்பட்டிருக்கின்றன.

    சந்திரயான் 3

    அடுத்து பிரஞ்யான் ரோவர் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? 

    நிலவின் தென் துருவப் பகுதியில் அடுத்து செப்டம்பர் 22ம் நாள் தான் சூரிய உதயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த சூரிய உதயத்தின் போது, சூரிய ஒளியைப் பெறும் வகையில் பிரஞ்யான் ரோவரின் சூரிய ஒளித் தகடுகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.

    நிலவின் கடும் குளிர் இரவைக் கடந்து, அடுத்த சூரிய உதயத்தின் போது பிரஞ்யான் ரோவர் செயல்பட்டால், மேற்கொண்டு நிலவில் பரிசோதனைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்படும். இல்லையேல், இந்தியாவின் தூதுவராக நிலவின் தென் துருவத்திலேயே நிரந்தரமாக பிரஞ்யான் ரோவர் துயில் கொள்ளும்.

    அடுத்த சூரிய உதயத்தின் போது பிரஞ்யான் ரோவர் செயல்படாத பட்சத்தில், இதுவே சந்திரயான் 3 திட்டத்தின் முடிவாக இருக்கும். சூரிய உதயத்திற்குக் காத்திருப்போம்!

    ட்விட்டர் அஞ்சல்

    இஸ்ரோவின் எக்ஸ் பதிவு:

    Chandrayaan-3 Mission:
    The Rover completed its assignments.

    It is now safely parked and set into Sleep mode.
    APXS and LIBS payloads are turned off.
    Data from these payloads is transmitted to the Earth via the Lander.

    Currently, the battery is fully charged.
    The solar panel is…

    — ISRO (@isro) September 2, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    பிரஞ்யான் ரோவர்
    விண்வெளி
    இஸ்ரோ

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    சந்திரயான் 3

    சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலை செய்யவிருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    சந்திரயான்-3 தரையிறக்கம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்; வலுக்கும் கண்டனங்கள்  பிரகாஷ் ராஜ்
    F77 பைக்கின் ஸ்பேஸ் எடிஷனை அறிமுகப்படுத்திய அல்ட்ரா வைலட் நிறுவனம் எலக்ட்ரிக் பைக்
    சந்திரயான் 3: தரையிறக்கத்தை ஆகஸ்ட் 27க்கு ஒத்தி வைக்கவும் வாய்ப்பு! இஸ்ரோ

    பிரஞ்யான் ரோவர்

    சந்திரயான் 3: நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டது பிரஞ்யான் ரோவர் சந்திரயான் 3
    நிலவில் எத்தனை நாட்களுக்கு லேண்டர் மற்றும் ரோவர் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்? சந்திரயான் 3
    நிலவில், அசோகர் சின்னத்தையும், இஸ்ரோ சின்னத்தையும் பொறித்த தருணம்: ISRO வெளியிட்ட புதிய வீடியோ சந்திரயான் 3
    நிலவின் தென்துருவப் பகுதியில், சல்பர் உட்பட வேதிப்பொருட்களின் இருப்பை கண்டறிந்த சந்திரயான் 3 சந்திரயான் 3

    விண்வெளி

    சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக் கோளை வெற்றிகரமாக நிலை நிறுத்தியது PSLV-C56 சிங்கப்பூர்
    வாயேஜர்-2 விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு, விரைவில் சரியாகும் என நம்பிக்கை தெரிவிக்கும் நாசா நாசா
    நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான்-3யை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ சந்திரயான் 3
    வாயேஜர் 2-விடமிருந்து மெல்லிய சமிஞ்ஞைகளைப் பெற்ற நாசா நாசா

    இஸ்ரோ

    சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்? சந்திரயான் 3
    சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்! சந்திரயான் 3
    இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு? சந்திரயான்
    சந்திரயான்-3 பின்னால் இருக்கும் இஸ்ரோ குழுவை பற்றி ஒரு பார்வை சந்திரயான் 3
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025