NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / கட்டுப்பாடில்லாமல் மீண்டும் பூமியை வந்தடைந்த சந்திரயான்-3 ராக்கெட் பாகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கட்டுப்பாடில்லாமல் மீண்டும் பூமியை வந்தடைந்த சந்திரயான்-3 ராக்கெட் பாகம்
    கட்டுப்பாடில்லாமல் மீண்டும் பூமியை வந்தடைந்த சந்திரயான்-3 ராக்கெட் பாகம்

    கட்டுப்பாடில்லாமல் மீண்டும் பூமியை வந்தடைந்த சந்திரயான்-3 ராக்கெட் பாகம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 16, 2023
    11:48 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய LVM3 M4 ஏவுகணை வாகனத்தின் கிரையோஜெனிக் மேல் நிலை, புதன்கிழமையன்று (நவம்பர் 15) பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடில்லாமல் மீண்டும் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டது. அது இந்தியா மீது கடந்து செல்லவில்லை." என தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் பாகம் LVM3 M4 ஏவுகணை வாகனத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக இஸ்ரோ கூறியுள்ளது.

    ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் மீண்டும் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    Chandrayaan 3 rocket parts enters earth in uncontrollable

    விண்வெளிக்குப்பை வழிகாட்டுதல்களை பின்பற்றி இஸ்ரோ நடவடிக்கை 

    LVM3 M4 கிரையோஜெனிக் மேல் நிலையின் பயணத்திற்குப் பிந்தைய சுற்றுப்பாதை வாழ்நாள், இஸ்ரோவின் இன்டர்-ஏஜென்சி ஸ்பேஸ் டிப்ரிஸ் ஒருங்கிணைப்புக் குழு (ஐஏடிசி) பரிந்துரைத்தபடி, குறைந்த-பூமி சுற்றுப்பாதை பொருட்களுக்கான "25 ஆண்டு விதிக்கு" முழுமையாக இணங்குகிறது.

    சந்திரயான்-3 செலுத்துதலுக்கு பிறகு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐஏடிசி பரிந்துரைத்த விண்வெளிக் குப்பைகளைத் தணிக்கும் வழிகாட்டுதல்களின்படி, தற்செயலான வெடிப்புகளின் அபாயத்தைக் குறைப்பதற்காக, எஞ்சியிருக்கும் அனைத்து உந்துசக்தி மற்றும் எரிசக்தி ஆதாரங்களையும் அகற்ற, மேல் நிலை செயலற்ற நிலைக்கு உட்பட்டது.

    சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இந்த ராக்கெட் பாகத்தை செயலிழக்கச் செய்தல் மற்றும் பணிக்குப் பின் அகற்றுவது, விண்வெளி நடவடிக்கைகளின் நீண்டகால நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    சந்திரயான்
    இஸ்ரோ
    விண்வெளி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சந்திரயான் 3

    சந்திரனில் சரித்திரம் படைத்த இந்தியா; அயர்லாந்தில் இந்திய கிரிக்கெட் அணி கொண்டாட்டம் இந்திய கிரிக்கெட் அணி
    'சந்திராயன்-3' வெற்றி குறித்து 'சந்திராயன் 1' திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை  இஸ்ரோ
    சந்திரயான் 3: நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டது பிரஞ்யான் ரோவர் பிரஞ்யான் ரோவர்
    'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள்  சந்திரன்

    சந்திரயான்

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான் 3
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான் 3
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான் 3
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான் 3

    இஸ்ரோ

    ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1' ஆதித்யா L1
    ஆதித்யா L1 ஏவல் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது இஸ்ரோ ஆதித்யா L1
    "இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி இந்தியா
    சந்திரயான் 3இன் அடுத்த சாதனை: நிலவில் சதம் அடித்தது பிரக்யான் ரோவர்  சந்திரயான் 3

    விண்வெளி

    ஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ ஆதித்யா L1
    ஆதித்யா L1 மற்றும் சந்திரயான் 3யின் அடுத்த கட்ட செயல்பாடுகளை செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    இஸ்ரோவின் வெற்றியைக் கொண்டாடும் பள்ளி மாணவர்கள், காணொளியைப் பகிர்ந்த மத்திய அமைச்சர் இஸ்ரோ
    சந்திரயான் 3 குறித்த மாபெரும் 'வினாடி வினா போட்டி', ரூ.1 லட்சம் பரிசு சந்திரயான் 3
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025