
கட்டுப்பாடில்லாமல் மீண்டும் பூமியை வந்தடைந்த சந்திரயான்-3 ராக்கெட் பாகம்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய LVM3 M4 ஏவுகணை வாகனத்தின் கிரையோஜெனிக் மேல் நிலை, புதன்கிழமையன்று (நவம்பர் 15) பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடில்லாமல் மீண்டும் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டது. அது இந்தியா மீது கடந்து செல்லவில்லை." என தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் பாகம் LVM3 M4 ஏவுகணை வாகனத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக இஸ்ரோ கூறியுள்ளது.
ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் மீண்டும் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan 3 rocket parts enters earth in uncontrollable
விண்வெளிக்குப்பை வழிகாட்டுதல்களை பின்பற்றி இஸ்ரோ நடவடிக்கை
LVM3 M4 கிரையோஜெனிக் மேல் நிலையின் பயணத்திற்குப் பிந்தைய சுற்றுப்பாதை வாழ்நாள், இஸ்ரோவின் இன்டர்-ஏஜென்சி ஸ்பேஸ் டிப்ரிஸ் ஒருங்கிணைப்புக் குழு (ஐஏடிசி) பரிந்துரைத்தபடி, குறைந்த-பூமி சுற்றுப்பாதை பொருட்களுக்கான "25 ஆண்டு விதிக்கு" முழுமையாக இணங்குகிறது.
சந்திரயான்-3 செலுத்துதலுக்கு பிறகு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐஏடிசி பரிந்துரைத்த விண்வெளிக் குப்பைகளைத் தணிக்கும் வழிகாட்டுதல்களின்படி, தற்செயலான வெடிப்புகளின் அபாயத்தைக் குறைப்பதற்காக, எஞ்சியிருக்கும் அனைத்து உந்துசக்தி மற்றும் எரிசக்தி ஆதாரங்களையும் அகற்ற, மேல் நிலை செயலற்ற நிலைக்கு உட்பட்டது.
சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இந்த ராக்கெட் பாகத்தை செயலிழக்கச் செய்தல் மற்றும் பணிக்குப் பின் அகற்றுவது, விண்வெளி நடவடிக்கைகளின் நீண்டகால நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.