
எலான் மஸ்க் நிறுவனத்திற்கு பின்னடைவு; சூரிய காந்த புயலால் ஸ்டார்லிங்கின் 500க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செயலிழப்பு
செய்தி முன்னோட்டம்
எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் அதன் லட்சிய ஸ்டார்லிங்க் திட்டத்தில் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.
2020 மற்றும் 2024 க்கு இடையில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் 500 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை அந்நிறுவனம் இழந்துள்ளதுதான் இதற்கு காரணமாகும்.
சமீபத்திய அறிவியல் பகுப்பாய்வு இந்த இழப்புகளை சூரிய சுழற்சி 25 இன் போது அதிகரித்த சூரிய செயல்பாடுகள் காரணமாக ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அதாவது, இது செயற்கைக்கோள் செயல்பாடுகளை பாதிக்கும் தீவிர புவி காந்த புயல்களைத் தூண்டியுள்ளது.
உலகளாவிய பிராட்பேண்ட் கவரேஜை வழங்க வடிவமைக்கப்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நெட்வொர்க், வாராந்திர ஏவுதல்கள் மூலம் வேகமாக வளர்ந்துள்ளது.
இருப்பினும், தற்போது சூரியனின் 11 ஆண்டு சுழற்சியில் உச்ச காலம் நிலவுவதால் கொரோனல் நிறை வெளியேற்றங்களை (CMEs) தீவிரப்படுத்தியுள்ளது.
பாதிப்புகள்
கொரோனல் நிறை வெளியேற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள்
இந்த நிகழ்வுகள் வளிமண்டலத்தில் சுற்றுப்பாதை சிதைவை துரிதப்படுத்துகின்றன மற்றும் செயற்கைக்கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் முன்கூட்டியே மீண்டும் நுழைய காரணமாகின்றன.
நாசா விண்வெளி இயற்பியலாளர் டென்னி ஒலிவேரா தலைமையிலான ஆய்வின்படி, அதிகரித்த கதிர்வீச்சு அழுத்தம் காரணமாக செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை சிதைவு விகிதம் அதிகரித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் மிகவும் அழிவுகரமான நிகழ்வுகளில் ஒன்று நிகழ்ந்தது, அப்போது ஒரு பெரிய சூரிய புயல் காரணமாக புதிதாக ஏவப்பட்ட 42 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சில நாட்களுக்குள் செயலிழந்தன.
இந்தத் தாக்கம் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் தொடர்ந்தது, இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்து மீண்டும் வளிமண்டலத்தில் நுழைந்தன.