Loading...
மனிதர்களின் உதவி இல்லாமல் ஹேக்கிங் செய்யுமா? ஓபன்ஏஐயின் அஸ்த்ரா ஏஐ திட்டத்தில் தடாலடி மாற்றம்
ஓபன்ஏஐ நிறுவனத்தின் அஸ்த்ரா ஏஐ திட்டத்தில் மாற்றம்

மனிதர்களின் உதவி இல்லாமல் ஹேக்கிங் செய்யுமா? ஓபன்ஏஐயின் அஸ்த்ரா ஏஐ திட்டத்தில் தடாலடி மாற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 09, 2026
04:03 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, அஸ்த்ரா என்ற பெயரில் ஒரு புதிய ஏஐ மாடலை உருவாக்கி வருகிறது. இது சாதாரண சாட்பாட்கள் போல கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் நின்றுவிடாமல், மனிதர்களின் குறைந்தபட்ச தலையீட்டுடன் சுயமாக இலக்குகளைத் தீர்மானித்து, டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி சிக்கலான பணிகளை செய்யும் ஏஜென்டிக் தொழில்நுட்ப திறனைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் சாப்ட்வேர் கோடிங் மற்றும் சைபர் பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

சைபர் பாதுகாப்பு

சைபர் பாதுகாப்பு அச்சமும் தற்காலிக நிறுத்தமும்

அண்மையில் நடத்தப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு சோதனைகளில், அஸ்த்ரா ஏஐ மாடலானது கணினி அமைப்புகளில் உள்ள தீவிரமான பாதுகாப்புக் குறைபாடுகளை சுயமாகக் கண்டறிந்து, அவற்றை மனுஷர்களின் உதவியின்றி ஹேக் செய்யும் ஆபத்தான திறனைப் பெற்றுள்ளது தெரியவந்தது.

நிறுவனத்தின் தயாராக இருக்கும் கட்டமைப்பு (Preparedness Framework) விதிகளின்படி, இது மிகக் கடுமையான கிரிட்டிகல் அளவிலான ஆபத்தாகக் கருதப்படுவதால், அஸ்த்ரா மாடல் தொடர்பான சில முக்கியமான ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஓபன்ஏஐ தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்துள்ளது.

சுயமாக திட்டமிட்டு நடவடிக்கை

சுயமாகத் திட்டமிட்டு நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள்

இந்த அஸ்த்ரா ஏஐ மாடலுக்கு ஒரு பொதுவான இலக்கைக் கொடுத்தால் போதும், அதுவே தாக்குதலுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து, கணினி வலையமைப்பிற்குள் ஊடுருவி, அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை தன்னிச்சையாக திட்டமிட்டு செயல்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இத்தகைய ஏஐ அமைப்புகள் தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால் அல்லது கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் முன்னோடியில்லாத அளவில் மிகப்பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் மிக அதிவேகமாக நடக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ADVERTISEMENT

எதிர்கால திட்டம்

அதிகரித்த பாதுகாப்பு அம்சங்களும் எதிர்காலத் திட்டமும்

சைபர் பாதுகாப்புத் துறையில் ஏஐ தொழில்நுட்பம் ஒருபுறம் பாதுகாப்பை பலப்படுத்தினாலும், மறுபுறம் தாக்குதல்களை ஊக்குவிக்கும் இருமுனை ஆயுதமாக மாறியுள்ளது என ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது.

அஸ்த்ரா ஏஐ இன்னும் முழுமையான ஆபத்து வரம்பைக் கடக்கவில்லை என்ற போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் உள்ளக பாதுகாப்பு அரண்களைத் தீவிரமாகப் பலப்படுத்திய பிறகே அடுத்தகட்ட சோதனைகள் தொடரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT