Page Loader
CrowdStrike புதுப்பிப்பால் பாதிக்கப்பட்ட விண்டோஸ் சாதனங்களை சரிசெய்ய மீட்பு கருவியை வெளியிட்டது மைக்ரோசாப்ட் 

CrowdStrike புதுப்பிப்பால் பாதிக்கப்பட்ட விண்டோஸ் சாதனங்களை சரிசெய்ய மீட்பு கருவியை வெளியிட்டது மைக்ரோசாப்ட் 

எழுதியவர் Sindhuja SM
Jul 22, 2024
11:16 am

செய்தி முன்னோட்டம்

CrowdStrike இன் தவறான புதுப்பிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை 8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்கள் பாதிக்கப்பட்டது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்களை சரிசெய்ய ஒரு மீட்பு கருவியை மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. இந்த மீட்பு கருவியானது துவக்கக்கூடிய USB டிரைவை உருவாக்கி, பாதிக்கப்பட்ட இயந்திரங்களை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை 8.5 மில்லியன் விண்டோஸ் சாதனங்கள் பாதிக்கப்பட்டது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது. ஒரு சதவீதத்திற்கும் குறைவான விண்டோஸ் சாதனங்கள் இதனால் செயலிழந்தது என்று மைக்ரோசாப்ட் கூறியிருந்தது.

 மைக்ரோசாப்ட் 

CrowdStrike புதுப்பிப்பு கணினிகளை என்ன செய்தது?

எனவே, விண்டோஸ் சாதனங்களை நம்பியிருந்த சில்லறை விற்பனையாளர்கள், வங்கிகள், விமான நிறுவனங்கள் மற்றும் பல தொழில்கள் ஆகியவற்றும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. தனித்தனியாக வெளியிடப்பட்ட இரு CrowdStrike இன் அறிக்கைகள், தொழில்நுட்ப முறிவு எப்படி நடந்தது என்பதையும் ஏன் பல அமைப்புகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டது என்பதையும் பற்றி மேலும் விளக்குகிறது. ஜூலை 19, 2024 அன்று 04:09 UTC மணிக்கு, நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, CrowdStrike, விண்டோஸ் சிஸ்டங்களுக்கு சென்சார் உள்ளமைவு புதுப்பிப்பை வெளியிட்டது. இந்த உள்ளமைவு புதுப்பிப்பு ஒரு தர்க்கப் பிழையைத் ஏற்படுத்தியதால், கணினி செயலிழப்புக்கு வழிவகுத்தது. இதனால், பாதிக்கப்பட்ட கணினிகளில் நீல திரை(BSOD) பிரச்சனை ஏற்பட்டது.