பிரஞ்யான் ரோவரின் 'க்யூட்' காணொளி ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ
சந்திரயான் 3 திட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 23ல் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கி, தொடர்ந்து தன்னுடைய லேண்டர் மற்றும் ரோவர் மூலம் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ. நிலவில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரஞ்யான் ரோவரின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வரும் இஸ்ரோ, தற்போது எக்ஸ் தளத்தில் புதிய கணொளி ஒன்றைப் பகிர்ந்திருக்கிறது. விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவின் மூலம் பதிவு செய்யப்பட்ட அந்தக் காணொளியில், ஏற்கனவே பயணம் செய்து கொண்டிருக்கும் பாதையில் இருந்து வேறு பாதைக்கு பிரஞ்யான் ரோவர் திரும்பும் காட்சி பதிவாகியிருக்கிறது. இதனைப் பகிர்ந்து, 'ஒரு சுட்டிக் குழந்தை விளையாடுவதைப் போல இருக்கிறது பிரஞ்யான் ரோவரின் நடவடிக்கை' எனப் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ.