Page Loader
சந்திரயான்-3 எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

சந்திரயான்-3 எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 10, 2023
12:24 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த ஜூலை-14ம் தேதி ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3. முதல் இரண்டு வாரங்கள் பூமியைச் சுற்றி வந்த சந்திரயான்-3யானது கடந்த ஆகஸ்ட்-1ம் தேதி நிலவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட்-5ம் தேதி நிலவைச் சுற்றிய சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைக்கப்பட்டது சந்திரான்-3 விண்கலம். இந்நிலையில், பூமியில் இருந்து சந்திரயான்-3 ஏவப்பட்ட பிறகும், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த பிறகும் அந்த விண்கலத்துடன் அனுப்பப்பட்டிருக்கும் லேண்டர் எடுத்த புகைப்படங்களை X தளத்தில் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ. பூமியில் இருந்து ஏவப்பட்ட பிறகு லேண்டர் இமேஜ் கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தையும், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த பிறகு லேண்டர் ஹரிசான்டல் வெலாசிட்டி கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறது இஸ்ரோ.

ட்விட்டர் அஞ்சல்

இஸ்ரோ பகிர்ந்த புகைப்படங்கள்: