NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான திட்டம் பற்றிய அப்டேட் தந்த ISRO
    அடுத்த செய்திக் கட்டுரை
    மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான திட்டம் பற்றிய அப்டேட் தந்த ISRO
    இஸ்ரோ தலைவர் சோமநாத் இந்த தகவலை தெரிவித்தார்

    மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான திட்டம் பற்றிய அப்டேட் தந்த ISRO

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 23, 2024
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த 20 ஆண்டுகளுக்குள், நிலவுக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பும் தனது லட்சியத் திட்டத்தை அறிவித்துள்ளது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ).

    டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோமநாத் இந்த தகவலை தெரிவித்தார்.

    இந்த இலக்கை அடைவதில் வரவிருக்கும் சந்திரயான்-4 மற்றும் சந்திரயான்-5 பணிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

    பணி நோக்கங்கள்

    மனிதர்களை ஏற்றிச் செல்லும் நிலவு ஆய்வுக்கு சந்திரயான் பணிகள் முக்கியமானவை

    சோமநாத் மேலும், "சந்திரயான்-3 பயணம் தொடரும். சந்திரயான்-4 மாதிரி தயாராக உள்ளது. நிலவை எப்படி அடைவது என்பதை நிரூபித்துவிட்டோம். ஆனால் அங்கிருந்து எப்படி திரும்புவது என்பதை இப்போது நிரூபிக்க வேண்டும்" என்றார்.

    நிலவில் தரையிறங்குவது மட்டுமல்லாமல், பாதுகாப்பாகத் திரும்பவும் இந்தியாவின் திறனைச் சோதிப்பதில் இந்த பயணங்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

    இது மனிதர்களை ஏற்றிச் செல்லும் சந்திர ஆய்வுக்கான ஒரு முக்கியமான படியாகும் என அவர் கூறினார்.

    கொண்டாட்டம்

    சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை தேசிய விண்வெளி தினம் குறிக்கிறது

    நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதன் நினைவாக, இந்த நிகழ்வானது முதல் தேசிய விண்வெளி தினமாகவும் குறிக்கப்பட்டது.

    2023ஆம் ஆண்டு இந்த நாளில், சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதில் இந்தியா வரலாறு படைத்தது.

    அடுத்தடுத்த வாரங்களில், பிரக்யான் ரோவர் சந்திர மேற்பரப்பில் ஆய்வு செய்து சோதனைகளை நடத்தியது.

    சந்திரயான்-3 நடத்திய ஐந்து சோதனைகள் "சிறந்த தரவுகளை" அளித்ததாக சோமநாத் வெளிப்படுத்தினார்.

    இது நிலவு மேற்பரப்பில் ஒரு காலத்தில் மாக்மாவால் நிரப்பப்பட்டதாக திருப்புமுனை கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.

    "இன்று சந்திரயான் 3இல் இருந்து 55GB தரவு உள்ளது,"என்று அவர் கூறினார்.

    இந்த தகவல் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் எனத்தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    விண்வெளி
    டெல்லி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இஸ்ரோ

    ஆதித்யா-L1ல் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணப் பயன்பாடு குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இஸ்ரோ ஆதித்யா L1
    சந்திரயான் 3 திட்டத்தின் ப்ரொபல்ஷன் மாடியூலை பூமிக்கு திசை திருப்பியது இஸ்ரோ சந்திரயான் 3
    ISRO 2024: 12 மெகா திட்டங்களை செயல்படுத்த திட்டம்; அவை என்ன? விண்வெளி
    சூரியனை முதல் முறையாகப் படம்பிடித்த ஆதித்யா L1 விண்கலம் ஆதித்யா L1

    விண்வெளி

    சிக்கித் தவிக்கும் ஸ்டார்லைனர் விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் மீட்க முடியுமா? ஸ்டார்லைனர்
    430,000 கிலோ எடையுள்ள ISSஸை பூமிக்கு கொண்டுவர உதவும் ஒப்பந்தத்தை கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ் சர்வதேச விண்வெளி நிலையம்
    100 மில்லியன் டாலர் ஸ்பேஸ்சூட் தயாரிப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது நாசா  நாசா
    ஸ்பேஸ்சூட் பிரச்சனைகளால் ISS ஸ்பேஸ் வாக் தாமதம்  நாசா

    டெல்லி

    கனமழையால் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு, மேலும் சிலர் படுகாயம் விமான நிலையம்
    பாதிக்கப்பட்ட டெல்லி விமான நிலைய முனையம் ஒரு மாதத்தில் மூடப்படுவதாக இருந்தது: அறிக்கை விமான நிலையம்
    கனமழை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு போன்றவையால் திணறும் டெல்லி: இதுவரை 6 பேர் பலி கனமழை
    டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025