NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன?
    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா?

    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 29, 2022
    06:27 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த மாதம், AIIMS -இன் இணையதளம் ஹேக் செய்யப்பட்ட பின், அடுத்ததாக இந்திய ரயில்வேயின் சர்வர் குறிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

    இந்திய ரயில்வேயின் சர்வர், டிசம்பர் 27 அன்று சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது.

    இரண்டு மாத கால இடைவெளியில், ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட இரண்டாவது அரசுத் தலைமையகம், இந்திய ரயில்வே.

    ஒரு தனியார் நிறுவனத்தின் அறிக்கையின்படி, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த, 30 மில்லியன் பயணிகளின் தரவு இப்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது.

    பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக, பொதுத்துறை நிறுவனங்கள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இப்போது கேள்விக்குள்ளாகி உள்ளது.

    இந்தத் தாக்குதல் உண்மையாக இருந்தால், இந்தியாவின் மிக முக்கியமான நிறுவனங்கள், இணையப் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதற்கு தாமதமாகிவிட்டன என்பதற்கான அறிகுறியாகும்.

    மேலும் படிக்க

    இந்திய ரயில்வேயின் இணையதளம்

    ரயில்வே இணையதளத்தில், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 30 மில்லியன் மக்களின் முக்கியமான தரவுகள் இப்போது களவாடப்பட்டுள்ளது என மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், வயது, முகவரி மற்றும் பாலினம் போன்ற நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட தரவுகளில் அடங்கும். அதில் பல அரசாங்க மின்னஞ்சல் முகவரிகளும் அடக்கம்.

    ஹேக்கர் ஃபோரம் பயனர் ஒருவர், ரயில்வேயின் பயனர் தரவுகளை விற்பதைக் கண்ட பிறகு தான், இந்திய ரயில்வே மீதான சைபர் தாக்குதல் பற்றிய தகவல்கள் வெளிவந்தன.

    விற்றவர் அடையாளம் தெளிவாக தெரியவில்லை. "ஷேடோஹேக்கர்" என்ற புனைபெயரில், செயல்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    எனினும் இதை இந்தியா ரயில்வே துறை மறுத்துள்ளது. தங்களின் இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என இன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ரயில்வே
    ரயில்கள்
    பயனர் பாதுகாப்பு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்திய ரயில்வே

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்தியா

    ரயில்கள்

    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி
    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வந்தே பாரத்

    பயனர் பாதுகாப்பு

    வாட்சப் கம்யூனிட்டி மற்றும் வாட்சப் குரூப் புதுப்பிப்பு
    எலன் மஸ்க் ட்விட்டரில் மறுசீரமைப்பு பணிகளை துவங்கியுள்ளார் ட்விட்டர்
    'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம் ட்விட்டர்
    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் 5G
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025