NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நிலவில் எத்தனை நாட்களுக்கு லேண்டர் மற்றும் ரோவர் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலவில் எத்தனை நாட்களுக்கு லேண்டர் மற்றும் ரோவர் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்?
    நிலவில் எத்தனை நாட்களுக்கு லேண்டர் மற்றும் ரோவர் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்

    நிலவில் எத்தனை நாட்களுக்கு லேண்டர் மற்றும் ரோவர் அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 24, 2023
    07:03 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தறையிறங்கிய சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டரில் இருந்து, இன்று காலை பிரஞ்யான் ரோவரும் தரையிறக்கப்பட்டது.

    இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணங்களின் உதவியுடன் அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

    பூமியின் கணக்கில் 14 நாட்கள் என்பது நிலவின் கணக்கில் ஒரு நாள் ஆகும். நிலவின் கணக்குப் படி, நேற்று மாலை நிலவில் சூரிய உதயத்தின் போது சந்திரயான் 3 தரையிறங்கியிருக்கிறது. பகல் நேரத்தில் நிலவின் தென்துருவப்பகுதியில் குறைவாகவே இருக்கும்.

    ஆனால், 14 நாட்களுக்குப் பிறகு, நிலவின் ஒரு நாள் முடிவடைந்து இரவு தொடங்கிய பிறகு, கடும் குளிரும் தென்துருவப் பகுதியில் பரவத் தொடங்கும்.

    சந்திரயான் 3

    14 நாட்களுக்குப் பிறகு? 

    சூரியன் இல்லாத கடும் குளிரான சமயத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் இயங்க முடியாது. மேலும், அதிகபட்ச குளிரால் அறிவியல் உபகரணங்களும் சேதாரமாகலாம். எனவே, தான் 14 நாட்களுக்குச் செயல்படும் வகையில் சந்திரயான் 3 திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    நிலவில் லேண்டர் மற்றும் ரோவர் மேற்கொள்ளும் அறிவியல் பரிசோதனை குறித்த தகவல்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும், சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் ப்ரொபல்ஷன் மாடியூல் வழியாக பூமியை வந்தடையும்.

    தற்போது அனுப்பப்பட்டிருக்கும் லேண்டர் மற்றும் ரோவர் அமைப்புகளானது பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

    ஆனால், அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் சந்திரயான் திட்டங்களில், நிலவின் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் திட்டங்களை இஸ்ரோ வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3
    பிரஞ்யான் ரோவர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சந்திரயான் 3

    புவியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம்  இஸ்ரோ
    நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கவிருக்கும் சந்திரயான் 3 சந்திரன்
    நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான்-3யை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ இஸ்ரோ
    இன்னும் சிறிது நேரத்தில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3 இஸ்ரோ

    பிரஞ்யான் ரோவர்

    சந்திரயான் 3: நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டது பிரஞ்யான் ரோவர் சந்திரயான் 3
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025