
OpenAI நிறுவனத்துக்கு போட்டியாக புதிய chatbotஐ களமிறக்க ஊழியர்களை பணியில் அமர்த்திய எலான் மஸ்க்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவில் ChatGPT மிகப்பெரிய அளவில் வளர்ந்து உலகை வியக்க வைத்த நிலையில், எலான் மாஸ்க் OPenAI நிறுவனத்துக்குப் போட்டியாக புதிதாக ஒரு செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக, கடந்த சில வாரங்களாக, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களை அணுகி, ChatGPT க்கு மாற்றாக ஒரு புதிய ஆய்வகத்தை உருவாக்குவது குறித்து, OpenAI என்ற ஸ்டார்ட்அப் மூலம் உருவாக்கப்பட்ட உயர்மட்ட சாட்போட், முயற்சியை நேரடியாக அறிந்த ஒரு சிலரை சந்தித்து உரையாடியுள்ளார் என்று கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனம் DeepMind Aiஐ வாங்குவதற்கு முன்னர், மஸ்க் அதை தீவிரமாக ஆதரித்தார். பின்னர், OpenAi தளத்தில் இணை நிறுவனராக பணியாற்றினார். தற்போது, அதிலும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு வேறொரு தளத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
நடுநிலையான, போட்டியாளர் Aiஐ உருவாக்க மஸ்க் ஒரு குழுவை பணியில் அமர்த்தியுள்ளார்
JUST IN: @elonmusk is building a team of AI researchers to develop an unbiased alternative to ChatGPT.
— Lior⚡ (@AlphaSignalAI) February 28, 2023
WokeAi
கூகுளில் பணிநீக்கம் செய்யப்பட்ட Ai ஆராய்ச்சியாளர் மஸ்க் நிறுவனத்தில் இணைந்தார்
இந்த முயற்சியை செயல்படுத்தும் முதல் கட்டமாக, சமீபத்தில் Alphabet இன் DeepMind AI யூனிட்டை விட்டு வெளியேறி, ChatGPT போன்ற சாட்போட்களை இயக்கும் மெஷின்-லேர்னிங் மாடல்களில் நிபுணத்துவம் பெற்ற இகோர் பாபுஷ்கின் என்ற ஆராய்ச்சியாளரை மஸ்க் பணியில் அமர்த்தியுள்ளார்.
ChatGPT உரையை உருவாக்குவதைத் தடுக்கும் பாதுகாப்புகளை நிறுவியதற்காக OpenAIஐ மஸ்க் பலமுறை விமர்சித்தார்.
இதைப் பற்றி ஒரு நேர்காணலில், பாபுஷ்கின் கூறுகையில், 'உள்ளடக்க பாதுகாப்பு குறைபாடுகளுடன் ஒரு சாட்போட்டை உருவாக்குவது மஸ்கின் நோக்கம் அல்ல' என்றார்.
மைக்ரோசாப்ட் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ChatGPT, சாட்போட் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, மஸ்க்கின் புதிய சாட்போட் பல்வேறு விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றி குறைவான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும்.