NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம்
    தொழில்நுட்பம்

    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம்

    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம்
    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 29, 2022, 11:19 pm 1 நிமிட வாசிப்பு
    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு மனிதர்களை கொண்டு செல்ல, வர போகிறது சமுத்ராயன் திட்டம்
    ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு சமுத்ராயன் திட்டம்

    இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் அடுத்த கட்டமாக, மனிதர்களை ஆழ்கடலுக்குள் அனுப்பி ஆராய்ச்சி செய்ய ஏதுவாக, புதிய திட்டம் வந்துவிட்டது. இத்தகைய ஆராய்ச்சி, ஏற்கனவே ஐரோப்பா,ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இப்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஆளில்லாத நீர்மூழ்கி கப்பல்கள் தான், ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தன. சில நாட்களுக்கு முன்னர், நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மனிதர்களை ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு அனுப்பும் முயற்சியாக 'சமுத்ராயன்' திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், 'மத்ஸ்யா 6000' என்ற ஆழ்கடல் வாகனம் மூலம், மூவரை கடலுக்கடியில் அனுப்பவிருப்பதாக, மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆழ்கடல் ஆராய்ச்சியும் கடலுக்கடியில் இருக்கும் வளங்களும்

    கடலுக்கடியில் இருக்கும் வளங்கள் குறித்தும், சரித்திர மிச்சங்கள் குறித்தும் ஆராய, இத்திட்டம் உபயோகப்படும். இந்த மத்ஸ்யா வாகனம், 6,000 மீட்டர் ஆழம் வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆழ்கடல் வாகனம், சென்னையைச் சேர்ந்த தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) மூலம் உருவாக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டத்தின் பணிகள் நிறைவு பெறும். சோதனை ஓட்டத்திற்கு பிறகு, ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்தப்படும். வெற்றிகரமான செயல்பாட்டிற்கு பிறகு, எதிர்காலத்தில், இதை மக்கள் பயன்பாட்டிற்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் ஈடுபடுத்த இருப்பதாக, மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர், ஜிதேந்திர சிங், மேலும் தெரிவித்தார். வாகனத்தின் அதிகபட்ச ஆழ்கடல் செயல்பாடு, 96 மணி நேரம் எனக்கூறப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Venkatalakshmi V
    Venkatalakshmi V
    Mail
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    இந்தியா
    சென்னை

    சமீபத்திய

    19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகள்
    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை காங்கிரஸ்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்

    சீனா

    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் உலகம்

    உலகம்

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்

    இந்தியா

    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் பாகிஸ்தான்
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்
    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம் மெட்டா

    சென்னை

    சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று துவங்கியது இந்தியா
    சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம் போக்குவரத்து காவல்துறை
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது தமிழ்நாடு

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023